Saturday, November 27, 2010

இரண்டு கதைகள்

முத்து முருகேசுன்னு ரெண்டு ஃப்ரண்ட்ஸ் இருந்தாங்களாம். அவங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட்ஸாம். பள்ளிக்கூடம், காலேஜ், கேண்டீன் சினிமா எங்கே போனாலும் ஒன்னா தான் போவாங்களாம்


ஒரு நாள் ரெண்டு பேரோட பேமிலிஸும் டூர் போகனும்னு ப்ளான் பண்ணாங்களாம், ஆனா முத்து கடைசி நேரத்துல வர முடியாம நின்னுட்டார். முருகேசு டூரை நல்லா என்ஜாய் பண்ணிட்டு வந்தாராம்.

அதுக்கப்புறம் ஒரு நாள் முருகேசு, முத்துவோட வீட்டுக்கு போனாராம், அங்கே முத்துவை பாத்து “ஏண்டா நீ டூருக்கு வரலை”ன்னு சண்டை போட ஆரம்பிச்சிட்டாராம்...

அடடே இதென்ன வம்பா போச்சுன்னு முத்து “இல்லடா எனக்கு உடம்பு சரியில்லை அதான் வரமுடியலை”ன்னு சமாதானம் சொல்ல ஆரம்பிச்சாராம்...

”அதெல்லாம் எனக்கு தெரியாது நீ ஏண்டா ப்ளான் பண்ணின டூருக்கு வரலை”ன்னு மல்லுக்கு நின்னு சண்டை போட்டராம் முருகேசு

இப்படியே சண்டை அதிகமாகி ரெண்டு பேரோட சட்டையும் கிழிஞ்சு போச்சாம்....

தத்துவம்: சண்டைன்னா சட்டை கிழியத்தானே செய்யும் சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு.
____________________________________________________________________________
 
ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம் “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..


அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம

“குப்புமி”


“குப்புமி”


“குப்புமி”ன்னு சொன்னானாம் பாவம்

கடைசிவரை அவனுக்கு ”சாவே” வரலையாம்...

இந்த கதை படிச்சுட்டு கதறிகதறி அழுதா நான் பொறுப்பில்லை :))

இந்த உலகம் ஒரு கிழக்கழுதை மாதிரி:

ஒரு கிழவன் தன் வீட்டுல ஒரு கழுதை வளர்த்தாராம். எதிர்பாராம ஒரு நாள் தன் பேரனை கூட்டிக்கிட்டு மகனை பாக்க கிளம்பினாராம். கூடவே கழுதையும் கூட்டிட்டு போனாராம். போற வழியில கழுதை மேல தன் பேரை உட்காரவச்சி கூட்டிட்டு போனாராம்... வழியில போறவங்க சொன்னாங்களாம்



“என்ன தம்பி உங்க தாத்தா வயசானவரா இருக்காரே அவரை கழுதை மேல உட்கார வச்சி நீ நடந்து போகக்கூடாதா’ன்னு.



தாத்தாவும் யோசிச்சு தன் பேரனை நடக்க சொல்லி தான் கழுதை மேல ஏறிக்கிட்டு போய்ட்டு இருந்தாங்களாம்...



கொஞ்ச தூரம் போன பிறகு அங்கிருந்தவங்க சொன்னாங்களாம்

“தாத்தா நீயாச்சும் நடந்து வரலாம், பாவம் சின்னபையன் நடக்க கஷ்டப்படுரானே அவனை கழுதை மேல ஏத்தி கூட்டிட்டு போனா என்ன”ன்னு..



தாத்தாவும் என்னடா இது வம்பா போச்சுன்னு கீழே இறங்கிட்டாராம்...ரெண்டு பேரும் நடந்துட்டே கழுதையும் கூட்டிட்டு போனாங்களாம்...



அங்கிருக்கவங்க சொன்னாங்களாம் ”கழுதையை பொதி சுமக்க தானே வளர்த்தீங்க இப்படி சும்மா கூட்டிட்டு போனா கழுதை உங்க பேச்சை கேக்காது”ன்னு.



தாத்தாவும் பேரனும் ரெண்டு பேருமே கழுதை மேல ஏறி உட்கார்ந்து கொஞ்ச தூரம் பயணம் செஞ்சாங்களாம்...

அந்த வழியில போரவங்க சொன்னாங்களாம் “பாவம் அந்த கழுதை மேல ரெண்டு பேரும் ஏறி உட்கார்ந்திருக்கீங்க அந்த கழுதை என்னத்துக்கு ஆகுரது”ன்னு திட்டினாங்களாம்..



இப்படி இந்த உலகம் நாம என்ன செஞ்சாலும் அதுக்கு எதாவது ஒரு குறை சொல்லிட்டே இருக்கும்.. நாம தான் நம்முடைய வழியை சரியா நிர்ணயிச்சுக்கிட்டு போய்ட்டே இருக்கனும்...



இப்படி செஞ்சாலும் வீட்டுல இருக்கரவங்க சொல்லுவாங்க ”சொன்ன பேச்சை கேக்குதா பாரு இதெல்லாம் எங்கேயிருந்து உருப்படப்போகுது” ன்னு



ஹ்ம்ம்

ஒன்னாங்கிளாஸ் சண்டை:: ஒரு சின்ன புனைவு

திங்கட்கிழமை காலைல நான், அழகா குளிச்சு தலையை எண்ணெய் சட்டியில முங்கி எடுத்து வழிச்சு வாரி விட்டு நெத்தியில திருநீரை நல்லா ஒரு வரிப்பட்டை மாதிரி இழுத்து கைல ஒரு துணிப்பை, அதுல ஒரு குட்டியா கரும்பலகை பைக்கு பேலன்ஸ் அந்த பலகை தான் சரியா இருக்கும் அந்தப்பையை வலது தோள்ல மாட்டிக்கிட்டு அம்மாகிட்ட போனேன்



அம்மா குடுத்த ஒரு ரூபாயை எடுத்துக்கிட்டு அண்ணாச்சி கடைக்கு போய் “தாத்தா எனக்கொரு பல்பம் வேணும்”னு முகத்தை சிணுங்கி வச்சிக்கிட்டு ஒரு ரூபாயை நீட்டினேன்.



கடைக்காரரும் “இந்தாப்பா”ன்னு ஒரு விரல் நீள மண்ணுபல்பத்தை கையில குடுத்தார்....



ஒரே நேர்பார்வையில வச்ச கண்ணு வாங்காம நான் க்ளாஸ்ல முதல் வரிசையில ரெண்டாவது ஆளா உட்கார்ந்தேன்...



எல்லாப்பசங்களும் வரவரைக்கும் அமைதியா பலகையும் பல்பத்தையும் மாறி மாறி பாத்துகிட்டு அம்மூஞ்சி மாதிரி அமைதியா இருந்தேன் நான் ...

கொஞ்ச நேரத்துல பக்கத்துல ஒரு பையன் என்னை மாதிரியே எண்ணெய் வழிச்சு வாரிட்டு “ஹி ஹி ஹி”ன்னு சின்ன சிரிப்போட வந்து உட்கார்ந்தான்



நான் கொஞ்ச நேரம் அங்கிட்டு இங்கிட்டு பாத்துட்டு பெப்பபே’ன்னு பேந்த பேந்த விழிச்சு பாத்துட்டு



“ஹேய் இங்க பாத்தியா என்கிட்ட புது பல்பம் இருக்கே”ன்னு அசடு வழிய காட்டினேன் அவனிடம்



அதுக்கு அவன் ”ஹை எங்கடா வாங்கினே புது பல்பம் இம்புட்டு நீளாமா இருக்கு” என்று உலக அதிசயத்தை முதல் முதலாக கண்டது போல் கண்களை நீளமாக விரித்து கேட்டான்.



அவன் பார்வையை பாத்ததும் நான் அந்த பல்பத்தை சடக்கென்று சட்டைப்பைக்குள் எடுத்து ஒளித்துகொண்டேன்....



சிறிது நேரத்திற்குள் பக்கத்திலிருந்தவன் பயத்தோடு “டேய் என் பல்பம் சின்னதா இருக்குடா உன் பல்பத்துல கொஞ்சம் உடைச்சி குடேன் நான் எழுதிட்டு தரேன்”



“ம்ஹூம் தரமாட்டேன் போடா நான் இன்னிக்கு தான் இந்த பல்பம் வாங்கினேன் இதையே இந்த வாரம்புல்லா எளுதனும்னு எங்கம்மா சொல்லிருச்சு நான் தரமாட்டேன் போடா” என்றேன் நான்...



”டேய் குட்ரா நான் வூட்டுப்பாடத்தைக்கூட எளுதலைடா கொஞ்சூண்டு குடேன்” என்று வாஞ்சையாக கேட்டும் தரவேயில்லை..



கொஞ்ச நேரத்திற்கு அவனை ஒருவித ஏளன பார்வை பார்த்து மறுபடியும் “இங்க பாத்தியா என்கிட்டே முழுபல்பம் இருக்கே உனக்கு தரமாட்டேனே” என்று கையில் பல்பத்தோடு தூக்கி காட்டிடேன்



அந்த நேரத்தில் தான் பக்கத்திலிருந்த அவன் தூக்கிப்பிடித்த கையிலிருந்து வெடுக்கென்று பல்பத்தை பிடுங்கப்போக, பல்பம் பாதியாக உடைந்து போகும்.......



”அம்மே.......... என் பல்பம் ஏண்டா உடைச்சே என் பல்பத்தை” என்று நம்மவன் வகுப்பு என்றுகூட பார்க்காமல் புரண்டு புரண்டு அழ ஆரம்பித்தேன்



“நான் கேக்கும்போதே நீ குடுத்திருந்தா பிடிங்கிருக்க மாட்டேன்ல” என்று சொன்னதும் நம்மவனுக்கு மூக்கிற்கு மேல் கோபம் பொத்துக்கொண்டு வர

பக்கத்திலிருந்து பேசியவனின் தலையில் சற்றும் எதிர்பாராமல் “நொங்ங்...”கென்று கொட்டினேன்...



“டேய் என்னை ஏண்டா அடிக்கிறே”என்று அடுத்தவன் அவன் தலைமேல் கொட்டினேன்



சிறிது நேரத்தில் இருவரும் அடிதடி, கிள்ளுவது, சட்டையை பிடிப்பது எல்லாசண்டைகளையும் போட்டிருப்பார்கள், கடைசியில் டீச்சர் வந்ததும் இருவரின் கண்களிலும் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தோடி அமைதியாக உட்கார்ந்திருந்தோம்..



டீச்சர் “டேய் என்னடா இங்கே சண்டை, ஏண்டா நீ அழுவுரே” என்று ஹிட்லர் ஸ்டைலில் கேட்டார்..



வாயைத்திறந்ததுமே “டீச்சர்ர்ர்ர்ர்ர் என் பல்பத்தை இவன் உடைச்சிட்டான் டீச்சர்” மூக்கில் தண்ணி வழியஓஓவென்று கத்தி ஆரம்பித்தேன்



டீச்சர் ”ஏய் வாய மூடு எதுக்கு அழுவுறே இரு உன் பல்பத்தை அவன்கிட்ட இருந்த வாங்கித்தரேன்” என்று அவனை இரண்டு அடி அடித்து கையிலிருந்த பல்பத்தை பிடுங்கி என்னிடம் கொடுத்தார்....



மறுபடி இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பாடத்தை கவனிக்க ஆரம்பித்தோம்..

எக்ஸாம் பிட்ஸ்

கடைசி வரை தோழி வித்யா அவர்கள் பிட் எப்படி அடிப்பது என்றே சொல்லவில்லையாதலால் என் வாழ்வில் நான் பின்பற்றிய, சொல்லிக்கொடுத்த பிட் அனுபவங்களையும் அதன் வழிமுறைகளையும் இங்கே பகிருகிறேன். வித்யா தங்கச்சி நோட் திஸ் மா!!




1. முதல் பிட்டு சின்ன சின்ன பேப்பர் எடுத்துகிட்டு எழுதவேண்டிய சப்ஜெக்ட்டோட முதல் பாடத்துல வர முதல் கேள்விக்கான ஹெட் லைன்ஸ் எல்லாம் அந்த குட்டிபேப்பர்ல எழுதி பர்ஸ்ல வச்சிடுங்க (இதுக்கு பஸ் டிக்கட் மாதிரியான பேப்பர்களை யூஸ் பண்ணிக்கிறது நல்லது, ஏன்னா சப்போஸ் இன்விஜிலேட்டர் பாத்துட்டாங்கன்னா அவங்களுக்கே தெரியாம தூக்கிவீசியெறிய வசதியா இருக்கும்.)



2. ஹால்டிக்கட்ல பின்னாடி மொக்கையான பென்சில்ல எழுதிக்கலாம், கேள்வித்தாள் கொடுத்ததும் அதுல ஹிண்ட்ஸையெல்லாம் நோட் பண்ணிக்கிட்டு அப்ரம் ஹால்டிக்கட்ல இருக்கரதையெல்லாம் அழிச்சிட்டு படிப்ஸ் மாதிரி எழுதிட்டு இருக்கலாம். கேள்வித்தாள் குடுத்ததும் உடனடியா செய்ர வேலை இது காலம் கடத்தினாலும் மாட்டிக்க வாய்ப்பிருக்கு. கேள்வித்தாள்ல எழுதிட்ட பிறகு வந்து கேட்டா அப்ரம் மறந்துடும் சார் அதான் இப்பவே எழுதிவச்சிக்கிறேன்னு ஒரு ரீலை விடனும்



3. மை பேனா இல்லைன்னா இங்க் பேனா இப்பல்லாம் யாரும் இங்க் பென் யூஸ் பண்ரதில்லை ஆனாலும் இங்க் பேனா பிட்டு அடிக்கிரதுக்கு பெஸ்ட். உள்ளங்கையில முக்கியமான கேள்விகள் வரைக்கும் தேர்ந்தெடுத்து எழுதிவச்சிக்கலாம், இதுல நிரைய எழுதிவைக்க முடியாது இருந்தாலும் ஹெட்டிங்க்ஸ், ஃபார்முலாஸ், படங்களையெல்லாம் வரைஞ்சு எழுதிவச்சிக்கலாம். எழுதிமுடிச்சுட்டு உள்ளங்கையை துடைச்சிட்டாலே போயே போச்சு பிட்டு, வியர்வை அதிகம் வரவங்க பிட்டை சீக்கிரமா நோட் பண்ணிவைக்கிறது நல்லது.



4. எக்ஸாம் ஹால்ல இருக்கர பென்ச், சேர் டேபிள் சுவரையும் நம்ம பிட்டுக்காக பயன்படுத்திக்கலாம், சின்சியரா படிக்கும் (?!) படிக்கிர மாதிரி இருக்கும்போது டேபிள்ல சில நோட்சையெல்லாம் கிட்ட பாத்தமட்டும் தெரியரமாதிரி எழுதிவச்சிக்கலாம், இதுக்கு பென்சில், இங்க் பென் பெஸ்ட் அடுத்த எக்ஸாம்க்கும் எழுதிவைக்கனுமில்ல. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு க்ளாஸ் ரூம்னா பிரச்சனையில்லை மை பென்லயே எழுதிவச்சிடலாம்.



5. பக்கத்துல நல்ல படிக்கிர பொண்ணா பாத்து கரெக்ட் பண்ணி உட்காரவச்சிக்கோங்க அந்த பொண்ணு உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம், இல்லைன்னா இன்விஜிலேட்டர்க்கு தெரியாம அவ பேப்பரை வாங்கி எழுதிக்கலாம். இதுவும் கொஞ்சம் கஷ்டமா இருந்தா வாசன் ஐ கேர்ல போய் கண்ணாடி வாங்கிபோட்டுக்கிட்டு முன்னாடி பென்ச்ல எழுதரவங்களை பாத்து எழுதிக்கலாம்.



இப்போ இருக்கர வசதிக்கு செல்போன்ல மெசேஜ் பண்ணியும் பிட்டு அடிச்சிக்கலாம் ஆனா பல கல்லூரிகள்ல அனுமதிக்கரதில்லை :(



இப்படியெல்லாம் பிட்டு அடிச்சு எழுத பயமா கஷ்டமா இருந்தா அமைதியா ராவோட ராவா படிச்சிட்டு வந்து எழுதலாம், ஆனாலும் அதுல ஒரு கஷ்டம் நிரைய படிச்சி எழுதினா நேரம் போதறதில்லை. அதனால எல்லாக்கேள்விகளுக்கும் சரியான விடைகளை எழுதும்போது முக்கிய குறிப்புகளையெல்லாம் அடிக்கோடிட்டு எழுதுங்க முடிஞ்சா ஸ்கெட்ச் பென்சில் யூஸ் பண்ணி அடிக்கோடிடலாம்,ரீல் விட்டு எழுதியிருந்தா அடிக்கோடிட வேண்டாம். கொஞ்சமா எழுதினாலும் பாக்க நச்சுன்னு இருக்கரமாதிரி கையெழுத்தும் பாயிண்ட்களும் அழகா எழுதுங்க :)

என் பஸ் (BUZZ) மொக்கை

நேரு சொன்னார் சோம்பேறித்தனம் மிகப்பெரிய எதிரி


காந்தி சொன்னார் உங்கள் எதிரிகளை நேசியுங்கள்’னு

மாமா சொல்ரதை கேக்கனுமா தாத்தா சொல்றதைக்கேக்கனுமா # மிகப்பெரிய டவுட்டு
_________________________________________________________________________
”எல்லாருக்கும் சொர்க்கத்துக்கு போகனும்னு ஆசை ஆனா யாருமே சாகனும்னு ஆசைப்படரதில்லை”


அதே மாதிரி தான்

நமக்கெல்லாம் பாஸாகனும்னு பேராசை ஆனா படிக்க சொன்னா யாரும் கேட்டுக்கரதில்லை :)))
_________________________________________________________________

வாழ்க்கையில பிறந்த நாள், இறப்பு நாள், கல்யாண நாள், இளமை, முதுமை எல்லாமே ஒரு முறை தான் ஆனா இந்த செமஸ்டர் எக்ஸாமை எவண்டா கண்டுபிடிச்சான் ஆறுமாசத்துக்கு ஒரு முறை வச்சு தொலைக்கிறாங்களே!
________________________________________________________________

தினமும் நீச்சல் அடிச்சா வெயிட்டு குறைஞ்சு ஸ்லிம் ஆகிடுவோம்னு சொல்ராங்க ஆனா இந்த திமிங்கலம் வாழ்க்கை பூரா நீச்சல் அடிச்சிட்டே தானே இருக்கு அது மட்டும் ஏன் ஸ்லிம் ஆகவே மாட்டேங்குது?
___________________________________________________________________________

தமிழ்: டேய் நம்ம கணக்கு மாஸ்டருக்கு அறிவே இல்லடா


முத்து: ஏண்டா அப்படி சொல்ரே?

தமிழ்: அவரோட நாலாவது பொண்ணுக்கு “அஞ்சு”னு பேரு வச்சிருக்காரு
____________________________________________________________________

கொசு: அம்மா நான் சினிமாவுக்கு போறேன்

அம்மாகொசு: அங்கே எல்லாரும் கை தட்டுவாங்க, உசாரா இரு

கொசு: இல்லம்மா நான் விஜய் படத்துக்கு தான் போறேன்
______________________________________________________________________________
டீச்சர்: ஏண்டா வீட்டுப்பாடம் எழுதலை


மாணவன்: எங்க வீட்ல கரண்ட் இல்ல சார்

டீச்சர்: மெழுகுவத்தி ஏத்தி படிக்கவேண்டியது தானே

மாணவன்: வத்திபெட்டி சாமி ரூம்ல இருந்தது சார், நேத்து நான் குளிக்காததுனால சாமி ரூம்க்குள்ள போகல சார்

டீச்சர்: ஏன் குளிக்கலை

மாணவன்: தண்ணியில்ல சார் மோட்டார் ஓடலை

டீச்சர்: ஏன் மோட்டர் ஓடலை

மாணவன்: எத்தனை முறை சார் சொல்ரது எங்க வீட்ல கரெண்ட் இல்லைன்னு

என்னோட அட்வைஸ் : மை டியர் ஃப்ரண்ட்ஸ் வீட்டுபாடம் எழுதலைன்னா கவலைபடாதீங்க இதுமாதிரி எதுனா டயலாக் சொல்லி ஏமாத்திடலாம் :))))

டிஸ்கி: நானே இதை காபியடிச்சு தான் எழுதியிருக்கேன் யாராச்சும் இதை காபி பண்ணீங்கன்னா அவங்க நா........ போக!!!

Thursday, October 14, 2010

ராங் கால் ஜொள்ஸ்!

பாஸ் (எ) பாஸ்கரன்ல சொல்ர மாதிரி இந்த கணேஷும் என்னை புலம்ப வச்சிட்டு இருக்கான், காலைலேர்ந்து 10 மிஸ்டு கால்ஸ் 5 மெசேஜஸ் இவன் தொல்லை தாங்கலை.. எத்தனை ஃப்ரண்ட்ஸ் இருந்தாலும் சில ஃப்ரண்ட்ஸ் பண்ர அலம்பல்

காலைல அவனுக்கு எதோ ஒரு பொண்ணு மெசேஜ் பண்ணிட்டாளாம். அதுவும் இங்கிலிஷ்ல நம்ம தம்பிக்கு இங்கிலிஷ்ல கொஞ்சம் இல்லை ரொம்ப டல் தான். அவ்ளோ தான் போச்சு காலைலேர்ந்து பஸ்ல என்னைத்தவிர ஒருத்தரையும் விடக்காணோம், எல்லாரும் அந்த மெசேஜை படிச்சிட்டு எனக்கு தெரியாதுன்னு கையவிரிச்சிட்டாங்க. இவரு ஒரே ஃபீலிங்க்ஸ்ல அந்த பொண்ணு என்ன அனுப்பியிருக்குன்னு ஒன்னு புரியாம ஒருத்தனை ஒருத்தன் பாத்துகிட்டு முழிச்சது தான் மிச்சம். என்ன கொடுமைடா சாமி காலைலயே மண்டைய பிச்சிக்கிட்டு அலைஞ்சிருக்காங்க.

நல்லவேளை நான் மட்டும் காலைல பஸ் ஏறியிருந்தேன்னா என்னை ஒரு வழி பண்ணியிருப்பான். “ஹாய் அக்கா குட்மார்னிங்”னு சொல்லி மொக்கைபோட்டு கழுத்தறுத்திருப்பான். கடவுளா பாத்து இன்னைக்கு பஸ்சை நிறுத்தாம செஞ்சிருக்கார்.


ஆனா இந்த ஆசை நிலைக்கலையே, பஸ் நிறுத்தின அரைமணி நேரத்துலயே

ட்ரிங் ட்ரிங்................ கணேஷ் காலிங்

”என்னடா கணேஷ் சொல்லு”


”அக்கா எப்படி இருக்கே, சாப்பிட்டியா ஏன் இன்னைக்கு பஸ்ல வரல”

ஆரம்பிச்சிடாண்ட இவன் மொக்கையைன்னு நினைச்சிக்கிட்டேன்.


”நல்லா இருக்கேன் சாப்பிட்டேன் பஸ் இன்னைக்கு என் ஸ்டாப்ல நிறுத்தவே இல்லடா அதான் வரலை ஆமா நீ எதோ மெசேஜ் புரியலைன்னு சிவாகிட்ட சொன்னியாமே என்னடா மெசேஜ் அது”


”அக்கா ஆமாம் அந்த மெசேஜ் யாரோ ஒரு பொண்ணு அனுப்பிச்சு என்னன்னு தெரியலை”

“பொண்ணா! என்னடா சொல்ரே யாருன்னு தெரியுமா, தெரியலைன்னா போன் பண்ணி கேக்கவேண்டியது தானே?”

“தெரியல அக்கா அந்த பொண்ணு பேரே சொல்லலை ஊரும் சொல்லலை ஆனா காலேஜ் மட்டும் படிக்கிரேன்னு சொல்லுச்சு”


”எந்த காலேஜ்ன்னாச்சும் கேட்டியாடா! உனக்கு பயமா இருந்தா என்கிட்ட நம்பர் குடு கேக்குரேன்”

”வேணாம் அக்கா நீ பேசாதே அப்ரம் அந்த பொண்ணு மெசேஜ் பண்ரதைகூட நிறுத்திடும் ஹி ஹி மெசேஜ்க்கு அர்த்தத்தை மட்டும் சொல்லு அதான் புரியலை”

”டேய் லூசாடா நீ பேரும் தெரியலை ஊரும் தெரியலை எவளோ ஒருத்தி அனுப்பின மெசேஜை டெலிட் பண்ண வேண்டியது தானே”

“இல்லக்கா அதுல கடைசியில மட்டும் ”மஸ்ட் ரிப்ளை மீ”ன்னு இருந்துச்சு அப்படின்னா நாம ரிப்ளை பண்ணி தானே ஆகனும் அதானால அதை மட்டும் சொல்லு”

“என்ன கருமமோ மெசெஜை அனுப்பித்தொலை சொல்ரேன்”

கொஞ்ச நேரத்தில் மெசெஜ் பறந்து வந்தது. மத்த நேரத்துல ஒரு குட்மார்னிங் சொல்லக்கூட இவனுங்ககிட்ட பேலன்ஸ் இருக்காது இப்ப மட்டும் எப்படியோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.


“If u get a chance to convert me into non-living thing and keep it with u ,what would u turn me into and why?”

அட பன்னாடை பயலுவலா டேய் இந்த மெசேஜாடா புரியலை உங்களுக்கு என்னத்த பன்னெண்டாங்கிளாஸ் வரைக்கும் படிச்சு கிழிச்சீங்களோ!!

ம்ஹ்ம் அனுப்பின அரை செகண்ட்லயே மறுபடியும் போன்.......

கட் செய்துவிட்டேன் இன்னும் மெசேஜை முழுசாகூட படிச்சு முடியலை அதுக்குள்ள என்ன தான் அவரசமோ!!

அதுக்குள்ள வேர வேலை வந்துடுச்சுன்னு எட்டிபாக்கரதுக்குள்ள எட்டு மெசேஜ்

நானே போன் பண்ணி “டேய் அது வேர ஒன்னுமில்லைடா அந்த பொண்ணை உயிரில்லாத பொருளா மாத்தி உன் கைல வச்சிக்கிட்ட என்ன பொருளா மாத்துவே ஏன்’னு கேட்டிருக்கா அவ்ளோ தாண்டா”

“அப்படியா அப்படின்னா நான் இப்பவே ரிப்ளை பண்ணிடுறேன் அக்கா”

“டேய் ஊர்பேர் தெரியாத பொண்ணுக்கு என்னடா ரிப்ளை பண்ணுவே”

“ஹி ஹி ஹி எதோ ஒன்னு பண்ணப்போறேன் அக்கா”


“டேய் ஏடாகூடமா எதாவது அனுப்பி இன்னைக்கு பல்புவாங்கப்போறே தெரியாத நம்பர்க்கெல்லாம் பதில் அனுப்பாதேடா”

“இல்லக்கா அந்த பொண்ணு என் பேரை தெளிவா சொல்லுதே”

”எப்படியோ போய் தொலை என்றேன்”

”ஹி ஹி ஹி சரிக்கா “என்று வைக்கிறேன் என்று கூட சொல்லாமல் வைத்துவிட்டான்.

பயபுள்ளை பல்பு வாங்கும்னு பாத்தா அந்த பொண்ணை மடக்கிட்டு வந்து நிக்குது.

மறுநாள் போன் செய்தான் “அக்கா ரொம்ப தேங்க்ஸ் அக்கா நீ சொன்னதை வச்சு அப்படியே ஒரு கவிதை மாதிரி எழுதிட்டேன் பொண்ணு க்ளிக் ஆகிடுச்சு” என்றான்.


“டேய் என்னடா இதெல்லாம் களவாணிப்பயலே இதெல்லாம் தேவையாடா உனக்கு, சரி நீ என்னன்னு ரிப்ளை பண்ணீனே அதைச்சொல்லு முதல்ல”



“சரிக்கா சொல்ரேன் என்ன திட்டக்கூடாது சரியா” என்று பால்வடியும் முகத்தோடு கேட்டேன்



“சரி சொல்லித்தொலை நான் எதுவும் சொல்லமாட்டேன்” என்று அரக்ககத்தினேன்.........

“ம்ம்ம்க்ர்ம்ம்....” என்று தொண்டையை சொருமிக்கொண்டு மெதுவாக சொல்ல ஆரம்பித்தான்



“மலரென்று சொன்னால்

காய்ந்துவிடுவாய்

நிலவெனச்சொன்னால்

தேய்ந்துவிடுவாய்

என் மூச்சென சொன்னால்

அரைநொடியில்

என்னிலிருந்து விலகிவிடுவாய்



என் இதய துடிப்பினில்

இடைவெளியிலும் நீயே

நிறைந்திருக்கிறாய்

உனை ஒப்பிட்டு பார்க்க

எனக்கேதும் தெரியவில்லை

என்றும் என்னுடன் வாழும்

கடவுளாய் உன்னை மாற்ற

விரும்புகிறேன்”

”எதோ கொஞ்சமா இதை தான் அக்கா கிறுக்கினேன்” என்று எதுவும் தெரியாத பிள்ளைபோல கூறினான்.

“அடடா டேய் பயபுள்ளை தெரியாத பொண்ணுகிட்ட நல்லாவே லாக் ஆகியிருக்கான்” என்று புரிந்துகொண்டு


”எப்படியோ நல்லா இருந்தா சரி தான் போடா” என்று துரத்திவிட்டேன்.....

இந்த பயலுங்ககிட்ட ஃப்ரண்ட்ஷிப் வச்சிக்கிரத விட எங்கயாச்சும் ஓடிபோய்டலாம் தொல்லைதாங்கலைடா சாமி!! ஹையையையையோ!!! :))

Monday, October 11, 2010

சின்ன சின்ன ஆசை

பக்கத்துவீட்டில் ஒரு சின்னபெண் நீண்ட நாட்களாக என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் “அக்கா நாம ஞாயிற்றுக்கிழமை நடக்குர சந்தைக்கு கண்டிப்பா போகனும்” என்று நானும் ஒவ்வொரு வார ஞாயிற்றுக்கிழமை காலைவேளைகளில் அவளை பார்க்கும்போதெல்லாம் இன்னைக்கு போகலாம் போகலாம் என்று தள்ளிக்கொண்டே வந்துகொண்டிருந்தேன்.

ஒவ்வொரு வாரமும் எதோ ஒரு வேலைகளில் மூழ்கிப்போய் அவளின் தீராத ஆசையை தள்ளிவைத்துக்கொண்டே சென்றது. அவளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு குற்ற உணர்ச்சி உறுத்திக்கொண்டே இருந்தது, காரணம் அவளை சந்தைக்கு அழைத்துச்செல்லாமல் போனது தான். இதற்கு காரணம் அவளுக்கு வீட்டில் அப்பா அம்மா, உடன் பிறந்தோர் இருந்திருந்தால் அவள் என்னிடம் கேட்க அவசியமே இல்லாமல் இருந்திருக்கும். அவள் பிறந்த உடன் அவளுடைய அம்மா கணவனிடம் எதோ சண்டைபோட்டு தீக்கிரையாகி, மனைவி போன துக்கத்தில் கணவனும் தூக்குபோட்டுக்கொண்டு பிள்ளைகளை பாட்டியிடம் தவிக்கவிட்டு சென்றுவிட்டனர்.

கடமை தவறிய பெற்றோர்கள் இறந்தாலும் வறுமையில் பாசத்திற்க்காக ஏங்கித்தவிக்கும் பிள்ளைகள், வாழ்க்கையில் இதுபோன்ர தவறான முடிவெடுத்து வாழ்க்கை விடுத்து பிள்ளைகளை அனாதையாக்கிய இவர்களை போன்றோர்களுக்கு மேலுலகம் போனாலும் சொர்க்கம் கிடைக்காது என நம்புகிறேன். பாட்டி,தாய்மாமன், சித்தி இவர்களிடமே வளர்ந்து வந்திருந்தாள். எங்கேயும் அவளை அனுப்புவதில்லை. அப்படியே சென்றாலும் எங்கள் தெருவிலுள்ள பெண்களை நம்பிமட்டுமே அனுப்பும் பாட்டி.

சிறுவயதிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வீட்டிலேயே இருந்தாள். அவளுடைய உலகம் 50மீட்டருடைய எங்களுடைய தெரு. இது மட்டுமே, எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவாள், பேசுவாள், அவளுடைய அன்னை தந்தையை பிரிந்த துயரை அடிக்கடி அழுது தன் கஷ்டத்தை ஆற்றிக்கொள்வாள். நாங்களும் அவளுக்கு அடிக்கடி ஆறுதல் சொல்லி அனுப்பிவைப்போம்.

இப்போது அவளுக்கு திடீரென சந்தைக்கு போக ஆசை, கிளப்பிவிட்டது நானே! நாம் தான் உளறுவாய்களாச்சே! நான் சில பொருட்களை வாங்கவேண்டும் சந்தையில் கிடைக்கும் போகலாமா என்றேன் சொன்ன மாத்திரம் அவள் பிடித்துக்கொண்டாள்.

எனக்கும் பல நாள்களாக சந்தைக்கு போகவேண்டுமென்ற ஆசை ஆனால் கிடைக்கும் ஒரேயொரு விடுமுறைநாளில் ஏன் வீணாக சுற்றியலைந்து திரிய வேண்டுமென்ற சோம்பேறித்தனத்தில் போகாமல் விட்டுவிட்டேன். இவளோ அடிக்கடி ஞாபகப்படுத்துவதிலே ஆர்வமாகி விட்டாள்.

அன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வீட்டிற்கு வந்து என்னுடைய அந்நாள் செயல்களைகேட்டுக்கொண்டாள்

“கலா இன்னைக்கு என்னென்ன வேலைகள் இருக்கு உனக்கு இப்பவே சொல்லிடு இன்னைக்கு சாயங்காலம் நாம சந்தைக்கு கண்டிப்பா போறோம்”

”இன்னைக்கு எந்தவேலையும் இல்ல பாரதி நாம கண்டிப்பா சந்தைக்கு போறோம்” என்றேன்

”சாயங்காலம் 4 மணிக்கு ரெடியாகி இரு நான் உன்னோட வரேன்” குறித்துவிட்டாள் நேரத்தை நான் ரெடியாக வேண்டுமே!

அன்றைய பொழுது சூப்பரான அசைவ சமையலோடும் தூக்கத்தோடும் எந்த கஷ்டமில்லாமலும் சென்றது, இப்போது ஆகிவிட்டது 4 மணி...வந்து வாசலில் நின்று விட்டாள் பாரதி

“என்ன கலா நீ இன்னும் ரெடியாகலையா நாம எப்போ போறது சந்தைக்கு சீக்கிரம் ரெடியாகு”

”அச்சச்சோ அதுக்குள்ள வந்துட்டியா நீயி இதோ அஞ்சு நிமிசத்துல ரெடியாகுறேன்” ம்கும் அஞ்சு நிமிசத்துலயா சான்சே இல்லை ரெடியாகுரதுன்னா சும்மாவா எத்தனை வேலை செய்யனும் ஹையோ மனத்தின் ஓலக்குரலோடே உள்ளே சென்றேன்.

”சீக்கிரம் ரெடியானியா கலா” வார்னிங் வந்துவிட்டது

“இதோ முடிஞ்சிடுச்சு” ம்கும் இப்போ தான் தலையை வாரிட்டு இருக்கேன், அதுகிடக்கு 4அடி முடி அதை சீவி வாரிமுடியரதுக்குள்ள எனக்கு இருக்கர கஷ்டம் எனக்கு தானே தெரியும் ம்ஹ்ம்! இவளுக்கென்ன குடுகுடுன்னு ரெடியாகி வந்துட்டா....

”இதோ வந்துட்டேன் பாரதி” என்றவுடன் இரண்டு முழம் பூவை என் தலையில் சொருகினாள்.

”அந்த பர்சை எடுத்துக்கிட்டியா, குடையை மறக்காம எடுத்துக்கோ மழை வரும், எல்லாத்தையும் ஒழுங்கா வச்சிக்கோ என்னென்ன வேணுமோ அதெல்லாம் சரியா வாங்கிக்கோ அப்ரம் அதுவாங்கலை இது வாங்கலைன்னு வந்து புலம்பினே கட்டையிலே அடிவிழும்” அம்மா மிரட்டலோடு வழியனுப்பி வைத்தாள்.

நாங்களும் பதினாறுவயதினிலே ஸ்ரீதேவியைப்போல ஒரே சந்தோசமுகத்தோடு பஸ் பிடிக்க நடந்து சென்றுகொண்டிருந்தோம்.... போகும் வழியிலயே என்னென்ன வாங்கவேண்டுமென்று சில பொருட்களின் பெயர்களையெல்லாம் குறித்து வைத்துக்கொண்டோம். வருவோர் போவோர் எல்லாம் ஒரு விதமாகவே பார்த்தார்கள் அதற்கு காரணம் நாங்கள் இருவரும் எதோ திருவிழாவிற்கு போவது போல் மிக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தோம்.

நடுவில் புகுந்த நரியை போல் பாரதியின் தாய்மாமன் எதிரே வந்துவிட்டான், நாங்களும் அவனை கவனிக்காமல் எங்களின் திட்டங்களோடும் பேச்சுகளோடும் சென்றுகொண்டிருந்தோம்

“பாரதி இந்த நேரத்துல எங்கம்மா போறே” என்றான்

“அது வந்து........ அது வந்து......... மாமா சந்தைக்கு போறோம்” தயங்கிக்கொண்டே சொன்னாள்

“என்னது வயசுப்பொண்ணு சந்தைக்கு போறியா... அப்பன் ஆத்தா இல்லாதவன்னு உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தா இப்போ சந்தைக்கு போறேன் அது இதுன்னு சொல்லிட்டு இருக்கியா, உன்னை ஒருத்தனுக்கு கட்டிவைக்கிர வரைக்கும் நீ எங்கேயும் போகக்கூடாது, திரும்பி நட” என்று ஓயாத இரைச்சலுடன் மிரட்டிவிட்டான்.

பாரதி பயந்து போய் பதில்பேசமுடியாமல் திணறினாள்..

அத்தனை ஆசைகளையும் மூட்டைக்கட்டிக்கொண்டு வந்த வழியே திரும்பி சென்றுவிட்டார்கள் பாரதியும் கலாவும் :(

Wednesday, October 6, 2010

“காலப்பயணிகள்/ ஒரே ஒரு ஊரிலே”

முதலில் இப்பொன்னான புத்தகத்தை எழுதி எங்களுக்கு அளித்த திரு. விழியன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.




காலப்பயணிகள்/ஒரே ஒரு ஊரிலே ஆகிய இரு கதைகளும் குழந்தைகளுக்கு மிகவும் பயனளிக்க்கூடியவை. குழந்தைகளுக்காக எழுதப்பட்ட இந்நூல் மிகவும் அருமையாக இருந்த்து. நாம் இந்த நூலை படிக்கும்போது சிறுவயது குழந்தைகளாக மாறிவிடுவோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. குழந்தைகளின் தெளிவான பேச்சு, வழக்கமான நகைச்சுவைகள், அறிவார்ந்த செயலாற்றல்கள், அவர்களுடைய வாழ்வியல் அனுபவங்கள் அனைத்தும் இக்கதையின் ஆசிரியர் அழகிய நயத்துடன் எழுதியுள்ளார்.



முதலில் காலப்பயணிகள் என்ற கதை என்னை மிகவும் கவர்ந்த்து. நான்கு மாணவர்களின் படிப்புத்திறன்,விளையாட்டு, அவர்களுடைய சுறுசுறுப்பு, எதையும் அறிந்து கொள்ளும் ஆவல் இப்படி குழந்தைகளுக்கே உரிய பண்புகளை அழகாக கதையுடன் இழைத்திருந்தார். நான்கு மாணவர்களிடம் கிடைத்த மந்திர புத்தகமும் அதன் மூலம் அவர்கள் பயணித்த பல்வேறு காலங்களை அழகாக விவரித்திருந்தார். அந்த மந்திரப்புத்தகத்தின் பற்றி வாசிக்கும்போதே படிப்பவர்களுக்கும் ஒரு அழகான இட்த்திற்கு செல்லபோகிறோம் என்கிர சுவாரசியம் அக்குழந்தைகளோடு நமக்கும் ஒட்டிக்கொள்வது எழுத்தாளரின் எழுத்து திறமை எனலாம். அந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள புதிரையும் அதற்கான விடையையும் அறிந்து கொள்ள ஓவ்வொரு காலத்தையும் அதற்குரிய வளமையும் எடுத்துரைத்த விதம் மிகவும் அருமை. விடையை கண்டுபிடிக்க மாணவர்கள் தங்கள் திறமையையும் அதன் மூலம் அவர்களோடு நாமும் பெறுகிர அனுபவம்



வளமான வாழ்க்கைக்கு நேரத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கினை மாணவர்களிடமிருந்து தொடங்க வேண்டும் என்கிற பாங்கு மிகவும் அருமையாக இப்புத்தகத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். மாணவர்கள் பல்வேறு காலங்களுக்கு சென்று நேரடியான அனுபவத்தை பெறுவது போன்ற கதையமைப்பு படிப்பவர்களையும் அந்த காலத்திற்கு சென்று அனுபவம் பெற்றது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது மிகவும் அருமை. மாணவர்கள் மந்திரப்புத்தகத்தின் மூலம் புராண காலத்திற்கு சென்று தக்க நேரத்தில் சரியான உதவியை செய்யவேண்டுமென்ற கருத்தை அழகாக எழுதியிருந்தார். அடுத்து விடுதலை போராட்ட காலத்திற்கு சென்று நம்முடைய பண்பாடு கலாச்சாரம் வீரம் விருந்தோம்பல் கொடை ஆகிய அனைத்தையும் அறிந்து கொள்ளமுடிகிறது. மூன்றாவதாக மந்திரப்புத்தகத்தின் மூலம் மாணவர்கள் முன்னோக்கிய காலத்திற்கு சென்ற அனுபவம் நாம் புத்தகத்தை படிக்கும்போது நம்மையும் அந்த இட்த்திற்கு கொண்டு செல்கிறது கதை. முன்னோக்கிய காலத்தில் நாம் பாதுகாக்க வேண்டிய இயற்கை வளமும் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றிய கருத்தும் மிகவும் கவருகிறது.



ஒரே ஒரு ஊரிலே கதை படிக்கும்போது நம்முடைய பள்ளிப்பருவ காலம் கண்முன்னே தோன்றுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. நான்கு மாணவர்கள் மற்றும் நாய்க்குட்டி என கதை மிக சுவாரசியமாக உள்ளது. மாணவர்கள் படிப்பு, விளையாட்டு, அரண்மனை, நண்பர்கள், சுற்றுலா, கலாட்டா என குழந்தைகளுக்கே உரிய பண்புகளை கதையுடன் அழகாக எழுதியுள்ளார். நாய்க்குட்டியின் சுய அறிமுகம் மிகவும் அருமை. மாணவர்களின் மலை சுற்றுலா அந்த ரகசிய நீருற்று அனைத்து காட்சிகளும் கண்முன் நிற்கின்றன. அங்கே அவர்களுடன் உறவாடும் சிறுமி, கண்ணாமூச்சி விளையாட்டு என அற்புதமாக சுற்றுலா பயணம் நகர்கிறது.



இந்த புத்தகத்தின் மூலம் மாணவர்கள் நேரத்தினை தங்களுக்கேற்ப சரியாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் வளமாக வாழ வேண்டுமென்ற கருத்தினை அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

Friday, September 17, 2010

என் பயணங்களில்......

நேற்றைய நிகழ்வு என் பயணங்களில் ஒரு காமெடியாகவே இருந்தது. இது நாள் வரை மிதிவண்டியில் நான் ஒருமையில் மட்டுமே பயணம் செய்து கொண்டிருந்தேன். யாருமில்லாத சாலையில் மேகங்களை பாத்துக்கொண்டே காய்ந்து போன மரம் செடி கொடி எல்லாவற்றுடனும் வரண்டு போன நிலங்களையும் சில நேரம் ரசித்து கொண்டே செல்வது வழக்கம். நான் ஒருவரே மிதிவண்டியில் செல்வதால் பயமில்லாமல் எதிரில் யார்வந்தாலும் போனாலும் ஒரு பொறுப்பில்லாம வண்டி ஓட்டிச்சென்று கொண்டிருந்தேன். நடுவில் இதுவரை யாரும் நிறுத்தியது கூட கிடையாது எப்போதாவது செல்போனில் அழைப்பு வந்தால் மட்டுமே நிறுத்திவிட்டு அதனை எடுத்துபேசிவிட்டு அப்படியே மீண்டும் என் பயணத்தை தொடர்வேன். பத்துநிமிட பயணம் தான் இருந்தாலும் அதில் ஒரு ரசனை, சுதந்திரம், விளையாட்டு, சோம்பேறித்தனம், என்னுடைய வழிச்சாலையை பார்க்கும் பொறுப்பு, வானத்தை பார்த்துக்கொண்டே செல்லும்போது ஆகாயத்தில் செல்வது போன்ற ஒரு பிரமை... ம்ம் ம்ம் எல்லாமும் தேவதை ஊர்வலம் வருவது போல பல நேரங்களில் என்னை நானே நினைத்துகொண்டதும் உண்டு.

நேற்று மாலை இதற்கெல்லாம் சற்று தடங்கல் வந்துவிட்டது..... எதிர்பாக்காமல் தான் ம்ஹ்ம் விபத்துகள் எப்போது தான் சொல்லிக்கொண்டு வருகின்றன. சொல்லாமல் ஏற்படுவதைத்தானே விபத்து என்கிறோம்.

மேகங்கள் கருகி பூமியில் கொட்ட ரெடியாக இருந்தது. காற்றிற்க்காக மட்டும் காத்திருந்தது போல. நான் மட்டும் ஆசுவாசமாய் பஸ்ஸில் இருந்து இறங்கி மெதுவாக சாலையை கடந்து வந்துகொண்டிருந்தேன். மொபைல் டொய்ங்... என்று ஒரே சத்தத்தில் நின்றது மெசேஜ் வந்திருந்தது கார்த்தியிடமிருந்து ”மழை வர மாதிரி இருக்கு சீக்கிரம் வீட்டைபோய்ச்சேரு மழைல நனையாதே” வழக்கம்போல அட்வைஸ் மழையை இவன் தொடங்கியிருந்தான்.

”சரி” என்று நானும் பதிலுக்கு ஒரு மெசேஜ் செய்துவிட்டு மிதிவண்டியை தள்ளினேன்... புஸ்ஸ்ஸ் பின்சக்கரத்தில் காற்று இல்லை. அடடே! மழை வர மாதிரி இருக்கு இந்த நேரத்துல சைக்கிள்ல காற்றில்லையே என்று எனக்கு நானே புலம்பிக்கொண்டு பக்கத்திலிருந்த கடைக்கு சென்றேன். அங்கே கூட்டம் பரவாயில்லை, போனவுடன் மிதிவண்டியில் காற்றைநிரப்பிகொடுத்தார் கடைக்காரர்.

“அக்கா என் சைக்கிள் பஞ்சர் ஆகிடுச்சு மழை வரமாதிரி இருக்கரதனால என்னோட சைக்கிளை இங்கேயே விடனுமாம் என்னை உன் சைக்கிள்ல கூட்டிட்டு போறியா” பக்கத்துவீட்டு பையன் எங்கிருந்தோ குதித்தான்.

“டேய் எனக்கு டபுள்ஸ் மிதிக்க வராதே உன்னைய எங்கேயாச்சும் தள்ளிவிட்டா நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்”

”பரவால்லக்கா மழைவரமாதிரி இருக்கு சீக்கிரம் வீட்டுக்கு போலாம் வா” என்று அவசரப்படுத்தினான்

”சரி நான் ஓட்டுரேன் நீ பின்னாடி உட்காரு” பெருமாளை நினைத்துக்கொண்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன்.

அவனும் வந்து உட்கார்ந்தான், மிதிவண்டி ஆட்டம்போட ஆரம்பித்தது, இதுவரை நான் டபுள்ஸ் மிதித்ததில்லை எனக்கு பேலன்ஸ் செய்யவும் தெரியவில்லை, ”டேய் வண்டியை ஆட்டாதே ஒழுங்கா உட்காரு” என்று அவனை கவனப்படுத்திக்கொண்டு அந்த சாலை முழுவதும் வளைந்து வளைந்து ஓட்ட ஆரம்பித்தேன்.

எதிரில் மாட்டுவண்டி, எனக்கு தூரத்தில் வரும்போதே பகீர் என்றது மாட்டுவண்டி வரும்போது கவனமாக ஒரே நேர்கோட்டில் ஓட்டவேண்டும் என்று என்னை உசார்படுத்திக்கொண்டு மெதுவாக ஓட்டிக்கொண்டு வந்தேன். மாட்டுவண்டி கிட்ட நெருங்க ஆரம்பித்தது,

அவனை மறுபடியும் கவனப்படுத்தினேன், டேய் மாட்டுவண்டி வருது ஒழுங்கா உட்காரு” எனக்கு லேசான பயம் தொற்றிக்கொண்டது. மாட்டுவண்டி அருகில் ஓட்டிக்கொண்டு வர ஆரம்பித்தேன்.

இப்போது பின்னால் இருந்தவன் சும்மா உட்கார்ந்திருந்தால் பிரச்சனையில்லை அந்த மாட்டை செல்லமாக ஒரு தட்டு தட்டப்போனான், சின்னப்பையனில்லையா எதோ ஆசையாக தட்டினான், அவ்வளவு தான் சைக்கிள் டொய்ங்ங்ங்...... என்று முன்னோக்கி வளைந்து நானும் நிலைதடுமாறி பேலன்ஸ்சை இழந்து விழுந்தேன்.... பின்னாடி இருந்தவன் உசாராக சைக்கிளில் இருந்து குதித்துவிட்டான். நான் விழுந்து முட்டிக்காலில் அடிவாங்கி மெதுவாக எழுந்தேன்.

அம்மே!! சாதாரண கீறல் தான் மண்சாலை தானே..சுதாரித்துகொண்டு எழுந்தேன்.அதற்குள் அவன் சைக்கிளை தூக்கிவிட்டான்

”என்னக்கா அடிபட்டிருச்சா” அவனுக்கு இப்போ உண்மையான பயமும் தெளிவும் தொற்றிக்கொண்டது.

”இல்லடா ஒன்னுமில்லை இப்போ நீ சரியா உட்காரு கூட்டிட்டுபோறேன்” என்று சமாளித்தேன்.

அக்கா பயப்படாம ஓட்டுங்க ஒன்னும் ஆகாது என்று அவன் எனக்கு தைரியம் கூறி இம்முறை தைரியத்தை துணையாகக்கொண்டு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று தைரியமாக ஓட்ட ஆரம்பித்தேன், மழையும் தொடங்க ஆரம்பித்து விட்டது.

Tuesday, August 3, 2010

சின்ன பாப்பா!

”ஆண்ட்டி ஆண்ட்டி வாங்க எங்க வீட்ல ஒரு குட்டி பாப்பா பிறந்திருக்கே” என்றவாறு எதிர்வீட்டை நோக்கி காயத்ரி ஓடிவந்தாள்


என்ன சொல்றே காயத்ரி உங்க அம்மா வீட்டுக்கு வந்துட்டாளா” பக்கத்துவீட்டு பார்வதி கேட்டாள்

ஆமா ஆண்ட்டி வாங்க எங்க வீட்டுக்கு” என்று ஆசையோடு அழைத்தாள் காயத்ரி

பார்வதி நேர்எதிர் வீட்டிலிருக்கும் காயத்ரியின் அம்மா அகல்யாவை பார்க்க வந்தாள்

அந்த கிராமத்தில் ஒரு நடுத்தர கிராமத்தில் வசித்து வரும் அகல்யாவின் குடும்பம். அகல்யா இரண்டாவது பிரசவம் முடிந்து பிஞ்சுக்குழந்தையோடு வீட்டிற்கு அப்போது தான் ஆட்டோவிலிருந்து வந்திறங்கி இருந்தாள்.

அதற்குள் நான்கு வயது நிரம்பியிருந்த சுட்டிப்பெண் காயத்ரி ஓடிப்போய் தனக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்கிறது என அவளின் தெருவிலிருக்கும் அனைவரிடமும் தம்பட்டம் அடித்து கூறிவிட்டாள்.

பார்வதியும் ஓடோடி வந்து பாசத்தோடு குழந்தையை எடுத்துக்கொண்டு கொஞ்சினாள். அவசரத்திற்கு சுடுதண்ணி வைத்துக்கொடுத்து அவள் வீட்டிலிருந்து சிற்றூண்டியை கொண்டுவந்து கொடுத்து சாப்பிடக்கொடுத்தாள்.

சற்றே ஓடியிருந்த ஐந்து நிமிடங்களில் அகல்யாவின் மாமியார் மாரியம்மாள் வயலுக்கு சென்று விறகு வெட்டியெடுத்துக்கொண்டு ஆயாசமாக வந்திறங்கினாள். சிறிது நேரம் வீட்டுத்திண்ணையில் இளைப்பாற்றிக்கொண்டாள்.

வீட்டிற்கு வந்திறங்கிய மருமகளையும் தன் பேரப்பிள்ளையும் பார்க்க வீட்டிற்குள் நுழைந்தாள். மாமியார் மாரியம்மாள் வீட்டில் நுழைந்த அடுத்த நொடி பூகம்பம் வெடித்தது அந்த வீட்டில்.............


“என்ன கருமம் வந்து பொறந்திருக்கு, என் மகனை கடன்காரனாக்கவே பிள்ளைய பெத்துகிட்டு வந்திருக்கா, முதல்ல பொறந்ததே பொட்டப்புள்ள, இதுல இரண்டாவதும் இதே மூதேவி வந்து பொறந்திருக்கே” என்று வரிந்துகட்டிக்கொண்டு வசைபாட ஆரம்பித்துவிட்டாள் மாரியம்மாள்.

அகல்யா கண்கள் நிறைய மடைகட்டிய வெள்ளம் போல நீரைக்கோர்த்துகொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். அத்தைக்கு என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்தாள்.

இந்த ரகளைகளையெல்லாம் அறிந்திராத காயத்ரியோ ஊரெல்லாம் ஆனந்த மழை பொழிந்து விட்டு தங்கச்சிபாப்பாவை ஆசையோடு கொஞ்ச வீட்டைநோக்கி வந்தாள். தன் சிற்றறிவுக்கு எட்டிய வரை வீட்டில் ஏதோ பிரச்சனை என்பதை மட்டும் ஊகித்துக்கொண்டாள். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்திக்கொள்ளாமல் அந்த பிஞ்சுக்குழந்தை நோக்கி வந்து அருகில் உட்கார்ந்தாள்.

ஒரு வித பயத்துடனே தன் மெல்லிய விரல்களால் லேசாக பிஞ்சுக்குழந்தையின் பூப்போன்ற விரல்களை தொட்டுக்கொண்டு தன் உடலை சிலிர்த்தாள். அந்த பிஞ்சின் ஸ்பரிசம் காயத்ரிக்கு எதோ ஒரு வித பாசத்தை குழந்தையின் மீது ஏற்படுத்தியது. கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையின் விரல்களைத்தொடுவதும், தலையை கோதுவதுமாக தன் சேட்டைகளை ஆரம்பித்துவிட்டாள் காயத்ரி.

ஒருபுறம் இவளின் கொஞ்சல்கள் தொடர்ந்துகொண்டிருக்க, மாரியம்மாளின் வசைகள் அகல்யாவை புண்படுத்திக்கொண்டிருந்தன.முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை பெண் இரண்டாவது பிரசவத்திலும் பெண்குழந்தையும் என்பதால் மாரியம்மாளின் ரத்தக்கொதிப்பை அதிகப்படுத்தியிருந்தது.

உடனே மாரியம்மாள் மருமகளை வசைபாடியதோடு நில்லாமல் அருகே கொல்லையிலிருந்த கள்ளிச்செடியை நோக்கி புறப்பட்டாள். கள்ளிச்செடியில் நான்கைந்து கிளைகளை பறித்து குண்டுகல்லை எடுத்து அதை நசுக்கி பாலினை ஒரு கிண்ணத்தில் சேகரித்துகொண்டிருந்தாள்.

இதைப்பார்த்த அகல்யா “ஓ”வென அழ ஆரம்பித்துவிட்டாள். ”வேண்டாம் அத்தை தயவு செஞ்சு இந்த பிஞ்சுக்குழந்தையை கொன்னுடாதீங்க” என்று அவளின் உச்சக்கட்ட உரத்த குரலினால் கத்தி கதறி கெஞ்சிக்கேட்டுக்கொண்டாள்.

மாரியம்மாள் “இந்த கடன்காரிகளை வச்சிக்கிட்டு என்ன பண்ண சொல்ரே என் மவன் வாழ்க்கை பூரா கஷ்டப்பட்டாலும் இதுங்களுக்கெல்லாம் சடங்கு கல்யாணம் சீர்வரிசைன்னு செஞ்சி செஞ்சி ஓய்ஞ்சுபோய்டுவான். இந்த கருமாந்திரத்தையெல்லாம் இப்பவே முடிச்சிடலாம். அமைதியா கொஞ்ச நேரம் சும்மா இரு” என்று அவளின் முடிவிலிருந்து மாறாமல் பாலை எடுத்துக்கொண்டிருந்தாள்.

சூரியன் வீசிவிட்ட கதிர்களையெல்லாம் தனக்குள் முடக்கி கொண்டிருந்த மாலைவேளையில் அகல்யாவின் கணவன் அசோகன் நாள் முழுதும் பட்டபாட்டில் ஓய்தொழிந்து வந்திருந்தான்.

அசோகன் தனக்கு பிறந்திருந்த இரண்டாவது குழந்தையை பார்த்து மகிழ்ச்சியடைந்திருந்தான். ஆனாலும் தன்னுடைய அம்மாவின் பேச்சை தட்டுபவனில்லை. அம்மாவின் வாக்கு வேதவாக்காக கொண்டு செயல்படுபவன் தான்.

வீட்டில் நடந்த பிரச்சனைகளையெல்லாம் ஓரளவுக்கு ஊகித்து இருந்த காயத்ரி ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அகல்யா மட்டும் அழுதுகொண்டே இருந்தாள். அசோகனும் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொல்ல நினைக்கும் அம்மாவின் கொடூரத்தை அறிந்திருந்தான்.

அசோகன் தன் இரண்டாவது குழந்தையை எடுத்து ஒரு முறை பார்த்துகொள்ளவேண்டுமென்ற ஆவலில் கையில் எடுத்துகொண்டான். காயத்ரியும் தன் அப்பாவிடம் வந்து பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

”அப்பா குட்டிப்பாப்பா அலகா இருக்குல்ல” என்று சிலாகித்துக்கொண்டாள்

ஏதும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான் அசோகன்.

”அப்பா ஏன்ப்பா அம்மா அழறாங்க”

“.............” இதற்கும் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்

“அப்பா பாட்டி இந்த பாப்பாவை கொன்னுடுவாங்கலாப்பா” என்று மழலை மாறாத மொழியில் கேட்டாள்.

மகளின் வார்த்தைகளைகேட்டதும் அசோகனுக்கு சுளீர் என்று குத்தியது போல் இருந்தது.

மாரியம்மாள் வேகமாக அசோகனின் கையிலிருந்து அப்போதே பூத்திருந்த மலரைப்போன்றிருந்த குழந்தையை வெடுக்கென பிடுங்கச்சென்றாள்.

அசோகன் முதல் முறையாக அம்மாவின் பேச்சுக்கெதிராக வேண்டாம் இந்த குழந்தையையும் நாம வளர்க்கலாம். நான் எப்பாடுபட்டாவது என் மகள்களை வளப்பேன் என்று உறுதியாககூறிவிட்டு கள்ளிப்பாலை தட்டிவிட்டான்.

மாரியம்மாளுக்கு முகத்தில் அறைந்தது போலிருந்தாலும் தன்னுடய மகனின் தன்னம்பிக்கைக்கு எதிராக பேசமுடியாமல் அமைதியாகிவிட்டாள்.

Friday, July 9, 2010

வடை பாயாசம் ரிட்டன்ஸ்..

நேற்று மாலை நடந்த சம்பவம்....................

வழக்கம்போல போற பஸ்ஸை மெதுவா போய் மிஸ் பண்ணிட்டேன். 5 நிமிசம் அடுத்த ஸ்டாப்பிங்ல நிக்கும்ங்கிர தைரியம் தான். அந்த பஸ்ஸை எப்படியாச்சும் பிடிக்கனும்னு ஆட்டோவிலே போய் பாதிவழியிலயே நான் போகவேண்டிய பஸ்ஸை பிடிச்சிட்டேன் . நான் ஏறாத வரைக்கும் காலியா இருந்த பஸ் நான் ஏறின ஸ்டாப்பிங்க்ல நிரம்பி வழிய ஆரம்பிச்சிடுச்சு. ஒரு வழியா கண்டக்டர்கிட்ட சொல்லி சீட்டை போட்டு என் ஃப்ரண்ட்ஸோட ஐக்கியமாகிட்டேன். என் ஃப்ரண்ட்ஸ் குரூப்ல நிறைய பேர் நேத்து மிஸ்ஸிங். ஒரே ஒரு அக்கா ரோகிணி மட்டும் இருந்தாங்க அவங்க கிட்ட மட்டும் ஸ்மைல் பண்ணிட்டு பக்கத்துல உட்கார்ந்துகிட்டேன்.

ஏறினதும் கூட்டமான பஸ்ஸைபாத்து கொஞ்சம் பயந்து அமைதியா அவங்களை எல்லாம் பாத்துட்டு இருந்தேன்.

ரோகினி அக்கா ”ஏம்மா அமைதியா இருக்கே ஆபிஸ்ல ரொம்ப வேலையான்னு கேட்டாங்க”,

“ஆமாம் அக்கா ரொம்ப ஆணி(?!) எல்லாத்தையும் புடுங்கிட்டு வரதுக்குள்ள பசியெடுக்க ஆரம்பிச்சிட்டது அதான் அமைதியா உட்கார்ந்திருக்கேன்”னு சொன்னேன்.

அவங்களும் ”சரிம்மா”ன்னு பதிலுக்கு ஒரு ஸ்மைல் பண்ணிட்டு அமைதியாகிட்டாங்க.

வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்த நேரத்துல தான் அந்த வாசனை வர ஆரம்பிச்சது, ரெண்டு பேருக்கும் நூறுவாட்ஸ் பல்பு போட்டமாதிரி ஒரு சந்தோசம். முதல்ல நான் தான் ஆரம்பிச்சேன்

எல்லாம் பசிமயக்கத்தோட விளைவு

“ எங்கேயோ வடைபாயாசம் வாசனை வருது ரோகினி அக்கா”

“ அட ஆமாம் யாரோ பஸ்ல பார்சல் பண்ணி எடுத்து வந்திருக்காங்க போல”

கொஞ்சம் ஆவலோட அந்தக் கூட்டத்துலையும் வடைபாயாச வாசனையுள்ள பையை தேட ஆரம்பிச்சிட்டோம்.

எங்கே எங்கேயிருக்கு அந்த பை. கொஞ்ச நேரம் நல்லா தேடியும் கண்ணுக்கு படவேயில்லை அந்த பை

”அடடா அக்கா பசிநேரத்துல எவ்ளோ சூப்பரா வடைபாயசம் செஞ்சு எடுத்துட்டு வந்திருக்காங்க வாசனை மூக்கை துளைச்சு பசியை கிளப்புதே!” கொஞ்சம் வருத்தமாவும் சொல்லிக்கிட்டேன்.

”சரி இரு கண்ணுலயாச்சும் பாத்துக்கலாம்” னு தேடு தேடுன்னு தேடுரோம் பை மட்டும் கிடைச்சபாடில்லை.ம்ஹ்ம்ம்ம் வாசனையை மட்டும் வாசிச்சுகிட்டு உட்கார்ந்திருந்தோம்.

அடுத்த 3 நிமிசத்துல வடைபாயாச வாசனை போய்டுச்சு, அடடே! ”அக்கா எங்கே வடைபாயாச வாசனை காணோம்”னு பேசிட்டு இருந்தோம். திரும்பி பாத்தா வடைபாயாச பை வைக்க பஸ்ல இடம் இல்லைன்னு கண்டக்டர் இறங்க சொல்லிட்டாராம். அந்த பை வச்சிருந்த அம்மாவும் கிழே இறங்கிட்டாங்க. நாங்க “வடபாயாசம் போச்சே!”ன்னு இஞ்சி தின்ன குரங்குஸ் மாதிரி அமைதியாகிட்டோம்.

அடுத்த நிமிசத்துலயே மறுபடியும் வடபாயாச வாசனை

“ அக்கா வடைபாயாசம் ரிட்டன்ஸ்”ன்னேன் ரோகினியக்கா ரொம்ப சந்தோசமாகிட்டாங்க. வடைபாயாச அம்மா எப்படியோ கண்டக்டர்கிட்ட சண்டைபோட்டு மறுபடியும் பஸ்ல ஏறிட்டாங்க.

கண்டக்டர்கிட்ட “அந்தம்மாக்கு பை வச்சிக்க கஷ்டமாயிருந்தா எங்ககிட்ட குடுங்க அவங்க இறங்கர வரைக்கும் நாங்க வச்சிக்கிறோம்” ஒரு பிட்டை போட்டோம்.

அவரும் அந்த வடைபாயாச அம்மாமேல எறிஞ்சி விழுந்து ”பையை குடும்மா உன் பை வைக்கிர இடத்துல ரெண்டு பேரு நிக்கல்லாம் ஏன் இப்படி எங்க உயிரை வாங்குரத்துக்குன்னே வறீங்க”ன்னு சொல்லி பையை வாங்கி குடுத்தார்.

ஹப்பா எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப சந்தோசம். அந்த வடைபாயாச பை எங்ககிட்ட வந்ததும் ஒரே கொண்டாட்டம் தான். அக்கா பையே நம்மகிட்ட வந்தாச்சு அந்தம்மாவுக்கு தெரியாம ஒரு ஓட்டைபோட்டு ரெண்டு வடைய சுடுங்கன்னு சொன்னேன். ரோகினி அக்கா சிரிச்சிட்டு அந்தம்மா வந்தாங்கன்னா நம்மளை திட்டுவாங்க வேணாம் வாசனையை மட்டும் பாத்துக்கோ’ன்னு சொன்னாங்க

அடுத்தடுத்த ஸ்டாப்பிங்ஸ்ல கொஞ்சம் ஜனத்தொகை கம்மியாச்சு வடைபாயாச அம்மா பக்கத்துல வந்து நின்னுகிட்டாங்க.

நாங்க வடைபாயாச வாசனை நுகர்ந்து கமெண்ட் பண்ணிட்டு இருந்ததை பாத்து முகம் சுழிச்சாலும் நாங்க இறங்குரதுக்குள்ள ஒரு வடை குடுத்துட்டாங்க.

ரோகினி அக்காவும் நானும் ரொம்ப சந்தோசமாகிட்டோம். இத்தனை நாள் பஸ் பயணத்துல நேத்து வடைபாயாசம் வாசனை மாதிரி எப்பவுமே வந்ததில்லை.

Tuesday, June 15, 2010

வெண்பா ஓரு குறும்பயணம்

வெண்பா அமைத்தலில் முதன்மையாக நாம் அறிவது

1. எழுத்து

2. அசை

3. சீர்

4. தளை

5. அடி

எழுத்து என்பது உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் மற்றும் இவையிரண்டு சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும்.

எழுத்தாலானது அசை.எழுத்துக்களை கூறும்போது ஏற்படும் ஒலிகளை வைத்து பிரிப்பது ஆகும். இதில் குறில் நெடில் என இருவகையாக பிரிக்கலாம்.

அசை என்பது நேரசை நிரையசை என இருவகைப்படும் நேரசை என்பது ஒற்றெழுத்தை நீக்கி ஓரெழுத்தும் நிரையசை என்பது ஒற்றெழுத்தை நீக்கி இரண்டு எழுத்துக்களும் பெரும்.

நேரசை:

நேரசை என்பது குறில் தனியாகவும், குறில் ஒற்றெடுத்தும், நெடில் தனியாகவும், நெடில் ஒற்றெடுத்தும் வருவது நேரசையாகும்.

      எ.கா: வாழ்/க - நெடில் ஒற்று / குறில் தனித்து வந்த நேரசை

நிரையசை:
குறில் இணை தனியாகவும் குறில் இணை ஒற்றெடுத்தும் குறில்நெடில் தனியாகவும் குறில்நெடில் ஒற்றெடுத்தும் வருவது நிரையசை ஆகும்.

          எ.கா: வளர்/க - குறில் இணை ஒற்றெடுத்து வந்த நிரையசை

சீர்:

சீர் என்பது ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நான்கசைச்சீர் என நான்கு வகைப்படும்

ஓரசைச்சீர் என்பது ஈற்றடிச்சீராக மட்டுமே வரும்

நேர் – நாள்

நிரை – மலர்

    எ.கா: பால் – நேர்

               தவில் - நிரை

ஈரசைச்சீர் என்பது

நேர் நேர் – தேமா - இயற்சீர்

நிரை நேர் – புளிமா மாச்சீர்

நிரை நிரை – கருவிளம்

நேர் நிரை – கூவிளம் விளச்சீர்

                எ.கா: சீ/ மா நேர் நேர்

                          சினி/மா நிரை நேர்

                         கரி/நாய் நிரை நிரை

                          சீ/மான் நேர் நிரை

மூவசைச்சீர் என்பது

நேர் நேர் நேர் – தேமாங்காய்

நிரை நேர் நேர் – புளிமாங்காய் - காய்ச்சீர்

நிரை நிரை நேர் – கருவிளங்காய் - வெண்சீர்

நேர் நிரை நேர் - கூவிளங்காய் வெண்பாவுரிச்சீர்

                   எ.கா: பா/கற்/ காய் – நேர் நேர் நேர்

                              கனல்/கண்/ணன் – நிரை நேர் நேர்

                               சிவந்/தகன்/னம் நிரை நிரை நேர்

                                கண்/ணடித்/ தல் நேர் நிரை நேர்

நேர் நேர் நிரை – தேமாங்கனி

நிரை நேர் நிரை – புளிமாங்கனி

நிரை நிரை நிரை – கருவிளங்கனி

நேர் நிரை நிரை – கூவிளங்கனி

                  எ.கா: கண்/ணின்/மணி நேர் நேர் நிரை

                             திரு/மா/லினை நிரை நேர் நிரை

                             திரு/முறை/களை நிரை நிரை நிரை

                             சல்/லடை/யெடு நேர் நிரை நிரை

தளை:

வெண்பாவிற்கு தேவையான தளைகளை மட்டும் பார்ப்போம்

மா முன் நிரை

விள முன் நேர் - இயற்சீர் வெண்டளை

காய் முன் நேர் - வெண்சீர் வெண்டளை

          எ.கா: மாய / வனைக்கண்டால் - மா முன் நிரை -இயற்சீர் வெண்டளை

                     மலர்களை/ போல் - விள முன் நேர் - இயற்சீர் வெண்டளை

            கண்ணிரண்டில் / மையிட்ட – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை

அடி:

இருசீரடி – குறளடி

                எ.கா: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

                            இறைவன் அடிசேரா தார்

முச்சீரடி – சிந்தடி

                          எ.கா: நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப்

                                      பிறநாட்டுப் பெண்டிட் முடிநாறும் பாரி

                                      அறநாட்டுப் பெண்டி ரடி.

நாற்சீரடி – அளவடி, நேரடி

              எ.கா: கொடுக்கின்றி வந்த விஷமதை வைக்க

                          நடுத்தொண்டை கண்டான் நயந்து -நடுவில்நான்

                          உள்ளதைக் கேட்டால் உவப்பின்றி சொல்லிடும்

                          சொள்ளையான காரணம் ஏன்

வெண்பா என்பது

வெண்பா என்பது ஈற்றடி சிந்தடியாகவும் மற்றைய அடிகள் அளவடிகளாகவும் வரும். இயற்சீர் வெண் சீரும் மட்டுமே வரும் மற்ற சீர்கள் எதுவும் வருவதில்லை.

இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை தளைகளாக வரும். முடிவாக கடைசி அடியின் ஈற்றுச்சீர் நாள் மலர் காசு பிறப்பு என்று முடியும்.

வெண்பாவில் ஆறுவ்கையான வெண்பாக்கள் உள்ளன. (குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை சிந்தியல் வெண்பா ,நேரிசை சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா)

மேற்கண்ட இலக்கணத்தை முறையான பயிற்சியோடு பழகினால் வெண்பா எழுதுவது எளிதாகும்.

Tuesday, June 8, 2010

ஊக்கமது கைவிடேல்

இதுவரைக்கும் உருப்படியான பதிவுன்னு ஒன்னையும் போட்டதில்லை. ஆதவன் சார்பா பரீட்சைன்னு ஒரு உருப்படியான பதிவு போடலாம்னா அதுவும் லேட் L. மன்னிக்கவும் நண்பர்களே! அருமை நண்பர் ஆதவன் ஐயா எக்ஸாம் பதிவை போட்ட நேரம் எனக்கு எக்ஸாம் இருந்த்தால் பதிவு எழுத நேரமில்லை.

இந்த வாரம் தான் எல்லா (ரெகுலர் எக்ஸாம் + அரியர்ஸ்) எக்ஸாமையும் முடிச்சிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன். எக்ஸாம் எழுதின கையோட இந்த எக்ஸாம் பதிவையும்ம் கொஞ்சம் முடிச்சிடலாம்னு இந்த பதிவு.

எக்ஸாம் பத்தி எழுதனும்னா நிறைய எழுதிக்கிட்டே போகலாம் ஆனாலும் நான் மொக்கை போட விரும்பலை. கொஞ்சமா எழுதிட்டு போய்டுரேன்.

காலாண்டு ஒரு பெருங்குற்றம்
அரையாண்டு ஒரு பாவச்செயல்
முழுஆண்டு ஒரு மனித தன்மையற்ற செயல்

இப்படியெல்லாம் பரீட்சைய குறை சொல்லிக்கிட்டு படிக்காம அரட்டை அடிச்சுட்டு வெட்டியா இருந்தாலும் சுமாரா பாஸ் பண்ணி எந்த வகுப்புலையும் கோட்டடிக்காம எல்லா க்ளாஸையும் தாண்டி வந்தாச்சு! ஆனா பாருங்க பள்ளிக்கூடத்துல அரியர்ஸ் வைக்காம ஒழுங்கா படிச்சுட்டு வந்த புள்ளை காலேஜ்னு வந்ததும் அரியர்ஸ் வச்சிட்டேன்.

யூ.ஜில படிக்கவே கூடாதுங்கி முடிவோட தான் காலேஜ்ல அடியெடுத்து வச்சேன். (அது ஒரு தனிக்கதை, நினைச்சது கிடைக்கலைன்னு ஒரு வருத்தம்.) எங்க வீட்ல அப்பாவும் அம்மாவும் ”படிக்கலைன்னாலும் பரவால்லம்மா நீ காலேஜ்க்கு போய்த்தான் ஆகனும்”னு துரத்திவிட்டு அப்புறம் எக்ஸாம் வந்த்தும் படி படின்னு ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணி பாஸ் பண்ண வச்சிட்டாங்க. ஆனாலும் விடுவேனா என்னோட ஆசைக்கு ஒரே ஒரு அரியர்ஸ் வச்சிக்கிட்டேன். ஏன்னா அரியர்ஸ் இல்லாத படிப்பு அரைபடிப்பாம் என்னோட சீனியர்ஸ் அட்வைஸ் இது.

வாழ்க்கைல பிறப்பு இறப்பு இளமை முதுமை இது எல்லாமே ஒரே ஒரு முறை தான். ஆனா இந்த எக்ஸாம்ஸ் இருக்கே... ஹப்பா! படுதொல்லை வருசா வருசம் வந்து தொலையும். இந்த எக்ஸாம் எழுத முறையை மட்டும் எவன் தான் கண்டுபிடிச்சானோ, அவன் மட்டும் கிடைச்சா ஒரு வழி பண்ணிடுவேன். கிட்டதட்ட என்னை மாதிரி படிக்காத பசங்க எல்லோரும் இந்த டயலாக்கை அவங்க படிக்கி காலத்துல ஆயிரம் முறை சொல்லி கொட்டாவி விட்டு, கடைசி பென்ச்ல தூங்கியிருப்பாங்க. கண்டுபிடிச்சவன் கிடைச்சுட்டாலும் படிக்காத சில பேரால அந்த ஒருத்தனை என்ன தான் செய்ய முடியும். :-( 

போன வாரம் நடந்த எக்ஸாம் உண்மையிலே ரொம்ப வித்தியாசமா இருந்து. எப்படின்னா, இதுவரைக்கும் எழுதின எக்ஸாம்ஸ்க்கெல்லாம் ஒரளவுக்காவது புக்கை தொட்டிருப்பேன். ஆனா இந்த தடவை, சுத்தம் சோறு போடும்னு எக்ஸாம் எழுத புக்கையே நிறைய தடவை தொலைச்சு எக்ஸாம் அன்னைக்கு கண்டுபிடிச்சு ஜஸ்ட் 4 மணி நேரம் படிச்சு(?!) எழுதினேன். இப்பல்லாம் புக்கை தொட்டாலே நல்லா கொட்டாவியும் அதுக்கு இலவச இணைப்பா தூக்கமும் வந்துடுது. ஒரு புத்தகம் ஆயிரம் தாய்மார்களுக்கு சமமாம் தூங்க வைக்கிறதுல.தூக்கம் வராதவங்களுக்கு என்னோட அட்வைஸ் பாடபுத்தகம் படிங்க நல்லா தூக்கம் வரும்.

இந்த எக்ஸாம் பயமெல்லாம் பள்ளிக்கூடம் வரைக்கும் தான். அரக்கபறக்க ஒரு எழுத்துவிடாம படிச்சு, எக்ஸாம்ல என்ன கேள்வி கேப்பாங்களோன்னு பயத்தோட போய் அதில வர கேள்விகளுக்கு அரைகுறையா சந்தேகத்தோட பதிலை எழுதி, நேரம் பத்தாம கடைசியில அந்த கேள்வி தப்புன்னதும் தலையணை பாதி நனைய அழுது தீர்த்து அப்ப்ப்பா...... எத்தனை பயம் ஸ்கூல்ல படிக்கும் போது மட்டும்.

ஆனா இப்பல்லாம் அந்த பயமே இல்லை ஏன்னா நாம தான் படிக்கதே இல்லையே! டிகிரி வாங்கனும்னு எதாவது ஒரு கோர்சுக்கு அப்ளிகேசனை போட வேண்டியது. புக்கை வாங்கி மேல் பரண்ல போட்டு வச்சிட வேண்டியது. பிசிபி க்ளாசை பாதி நாள் அட்டெண்ட் பண்ணி அதுலயும் தூங்கி வழிஞ்சு ஆபிஸ்ல இருக்க ஆணியை புடுங்கவே நேரம் சரியா இருக்கும். அப்புறம் ஒரு நாளோ, இல்லை ஒரு மணி நேரமோ படிச்சு மூணு மணி நேர எக்ஸாமை எழுதிட்டு வந்து அரியர்ஸ் வைக்க வேண்டியது. இதுவே வேலையாப்போச்சு!

ம்ஹ்ம்ம்ம்ம்... நாங்களும் எக்ஸாமுக்குப் படிக்கிறோம். அதனால நானும் படிப்ஸ், நானும் படிப்ஸ், நானும் படிப்ஸ்.....

Monday, April 19, 2010

ஜோக்ஸ் - 1

பையன்: அப்பா 1+1 எவ்ளோ’பா?


அப்பா: அட மாங்கா மடையா, தடி மாடு, தண்ட சோறு, மரமண்டை, எருமாடு மாதிரி வளர்ந்திருக்கியே இதுகூடவா தெரியலை உனக்கு, அந்த கால்குலேட்டரை எடுத்து வா



ஹோட்டல்காரர்: தினமும் பார்சல் வாங்கறீங்க அதுக்கு இங்கேயே சாப்பிடவேண்டியது தானே

சிவா: மன்னிக்கனும் சார் டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார்



குரங்கு1: எக்ஸ்க்யூஸ்மீ நான் இந்த மரத்துக்கு புதுசா வந்திருக்கேன் நான் உங்க பாஸ்கிட்ட பேசலாமா?

குரங்கு2: ஷ்ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதே எங்க பாஸ் சீரியஸா இந்த ஜோக்கை படிச்சுட்டு இருக்காரு



டீச்சர்: சூரியன் மேற்கே மறையும்’ இது இறந்த காலமா நிகழ்காலமா எதிர்காலமா?

மாணவன்: டீச்சர் அது சாயங்காலம் டீச்சர்



அப்பா: ஏண்டா நேத்து குடிச்சிட்டு விழுந்து கிடந்தே?

பையன்: எல்லாம் கெட்ட சகவாசம் தான்பா, 6பீர் 6 பேரு, அதுல 5 பேரும் குடிக்கலை. இந்த மாதிரி ஃப்ரண்ட்ஸ் இருந்தா இப்படி தான்.



பையன்: ‘காதல் வந்தால் சொல்லியனுப்பு’

பொண்ணு: போடா லூசு கல்யாணமே வந்திருச்சு.. இந்தா பத்திரிகை ‘உயிரோடிருந்தால் மொய் அனுப்பு”

கடி - 4

அவள் என்னைப்பிரிந்தால்

மது குடிக்க மாட்டேன்

தாடி வளர்க்க மாட்டேன்

அழுது புலம்ப மாட்டேன்

அமைதியாக தூங்கிக்கொண்டிருப்பேன்

அவள் தங்கையின் மடியில்!



இன்றைய தத்துவம்:

உங்களை யாராவது கல்லால் அடித்தால், நீங்க அவர்களை பூக்களால் அடியுங்கள், ஆனால் பூத்தொட்டியுடன் அடிக்க மறக்காதீர்கள்



என்னதான் பூமி சூரியனை சுத்தி சுத்திவந்தாலும் சூரியன் பூமிக்கு பிக் அப் ஆகாது



என்ன தான் செண்டிமெண்ட் பாத்தாலும் கப்பல் கிளம்பும்போது எலுமிச்சைபழம் வைக்கமுடியாது, சங்கு ஊதினாத்தான் கிளம்பும். இப்படிக்கு கப்பலில் மல்லாக்க படுத்துக்கொண்டு யோசிப்போர் சங்கம்


யானை எறும்பு ரெண்டு பேரும் ஒரே வகுப்புல படிக்கிறாங்க, யானை எப்பவு சரியான நேரத்துக்கு வந்துடும் ஆனா எறும்பு தினமும் க்ளாஸ்க்கு லீவ் போட்டுடும் ஏன் தெரியுமா??????????? ஏன்னா அது ‘கட்’ டெறும்பு.




நீங்க எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கனும் அதை நான் பாத்து ரசிக்கனும். இதெல்லாம் நடக்க நீங்க மெண்டலா இருக்கனும் நான் டாக்டரா இருக்கனும்.



கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்துல கைவக்கக்கூடாது

ஏன் தெரியுமா?

கன்னத்துல கைவச்சிருந்தா எப்படி நீச்சல் அடிக்கமுடியும்.



ட்ரெயின் வரும்போது ட்ராக்ல நின்னவனும், கோபம் வரும்போது “வாணி” முன்னாடி நின்னவனும் பொழச்சதா சரித்திரமே இல்லை!



அரிசி புட்டு குழாபுட்டு, இதைஎல்லாம் சாப்பிடலாம் ஆனா இன்புட் அவுட்புட்’டை சாப்பிடமுடியுமா! இப்படிக்கு லேப்ல அவுட்புட் வராமல் பசியில் துடிப்போர் சங்கம்



டெரரர் மொக்கை: மூணு கரப்பான் பூச்சி ரோட்ல நடந்துபோனதாம். திடீர்ன்னு “விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்” பாட்டு பாடினாங்களாம்,

அப்பறம் அந்த மூணு கரப்பான் பூச்சியும் செத்துப்போச்சாம்

ஏன் தெரியுமா?

ஏன்னா அது ஒரு ‘ஹிட்’ சாங்.

ஜோக்ஸ்

ஆசிரியர்: ஏன் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க தம்பி. கால்குலேட்டர் ஹால்டிக்கெட் கொண்டுவர மறந்துட்டீங்களா?


மாணவன்: இல்ல சார் தெரியாம நாளைக்கு பரீட்சையோட பிட்டை இன்னைக்கு எடுத்துவந்துட்டேன் சார்.



ராமு: என் மனைவி ரொம்ப அப்பாவி

சோமு: எப்படி சொல்றீங்க?

ராமு: அடிச்சா அழனும்னு கூட தெரியலை அவளுக்கு, என்னையே திருப்பி அடிக்கிறா!



மீனா: எஃப். எம்.ல வேலைக்கு போனது தப்பா போச்சு

கீதா: ஏன் என்னாச்சு?

மீனா: கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க’ன்னு சொல்றாங்க!



சிவா: அந்த பொண்ணு ரொம்ப ஒழுக்கமான பொண்ணு

பாலா: எப்படி சொல்றே

சிவா: நேத்து அவ வீட்டு குக்கர் விசில் அடிச்சதும் குக்கரை செருப்பால அடிச்சிட்டா!



டாக்டர்: நீங்க என்ன சோப் பயன்படுத்தறீங்க?

நோயாளி: கோபால் சோப், கோபால் பேஸ்ட், கோபால் ப்ரஷ்

டாக்டர்: கோபால் கம்பெனி ஒரு இண்டர்நேஷனல் கம்பெனியா?

நோயாளி: இல்ல டாக்டர் கோபால் என்னோட ரூம்மேட்



மனைவி: என்னங்க நம்ம மகன் பக்கத்து வீட்டு பொண்ணுகிட்ட லவ் லெட்டர் கொடுத்தனாம்

கணவர்: இல்லையே நான் அவளோட அம்மாகிட்ட தானே கொடுக்க சொன்னேன்



ஆசிரியர்: மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

மாணவன்: மணலுக்கு சொறிஞ்சு விட்டு நைசில் பவுடர் போட்டு விடனும் சார்



நடத்துனர்: டிக்கட் எடு

சிவா: முன்னாடி எடுப்பாங்க

நடத்துனர்: யாரும் எடுக்கலை

சிவா: அப்போ பின்னாடி எடுப்பாங்க

நடத்துனர்: பின்னாடியும் யாரும் எடுக்கலை

சிவா: அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா?



அமெரிக்கன்: எங்க ஊர்ல டால்பின்ஸ் பேசும்

ஜப்பான்காரன்: எங்க ஊர்ல ரோபோட்ஸ் எல்லாம் பாடும்

இந்தியன்: எங்க ஊர்ல குரங்கு படிக்கும் பாருங்க சிரிக்குது



போலிஸ்: உனக்கு நாளைக்கு காலைல 5 மணிக்கு தூக்கு தண்டனை

கைதி: ஹா ஹா ஹா

போலிஸ்: ஏண்டா சிரிக்கிற

கைதி: ஹையோ ஹையோ... நான் எந்திரிக்கிரதே 8 மணிக்கு தான்



அஜய்: என்னோட டான்ஸ் ஆட வரியா

ஸ்டார்: நான் சுவாமிஜியோட மட்டும் தான் ஆடுவேன் சாக்கடையோட இல்லை



அம்மா: ஏண்டா முடி வெட்டலை

பையன்: இது அந்நியன் ஸ்டைல்

அம்மா: ஏண்டா மீசை எடுத்துட்டே

பையன்: இது கஜினி சூர்யா ஸ்டைல்

அம்மா: ஏண்டா ஏழு நாளா குளிக்கலை

பையன்: இது வேட்டைக்காரன் ஸ்டைல்

Thursday, April 15, 2010

சுட்டது

என் பாதையில்

கடந்து வந்த முற்செடிகள்

காணாமல் போயின

அவளின் ஒரு நொடி

பார்வையில்...



நான்கு திங்களின்

நாலாயிரம்

பேர்களின் கனவுகள்

சிறு பொறியில் கலைக்கப்பட்டது

தேன்கூடு...



தமிழை வளர்க்க

தண்ணீர் ஊற்றிய

தமிழனே இன்று தடைக்கல்லாய்

தங்கிலிஷ்ல்.....



கிறுக்கிக்கொண்டிருக்கும்

கிறுக்கல்களின் நாயகனே

குழந்தை...



தனிமையில் சிந்திக்கும்

தலைகள் சில

தலைவர்கள் சில

தறுதலைகள்



கொடுமையிலும் கொடுமை

தேர்வில் தனிமை



வாழ்க்கை பயணத்தில்

நேர ஓட்டத்தை

கிழித்துச்செல்ல

முற்படுபவனுக்கு மிஞ்சுவது

ஏமாற்றமே....



வினாக்களுக்கு விடைதெரியாமல்

விலக்கு அளிக்கிறேன்

விடைகளுக்கு மட்டும்

கண்டுபிடித்துவிட்டேன்

தவறான விடைகளை....

விடைகளிருந்தும் தெரிந்தே தவறுவது

தவறா தப்பா

விடைகளிருந்தும்

விடை தெரியாமல்....



வினாக்கள் விடைகளோடு

தான் பிறக்கின்றன

விடைகளை தொலைத்துவிட்டு

தேடும் மானிட தேடல்கள்

வினாக்களும் விடைகளும்

அறிந்தவன்

அகில ஆசிரியனே.....



கவிதைதேடும்

கவிஞனில் கண்ணில் பட்டது

கவிதையல்ல

காவியம்



முயற்சியின் பயன்

வெற்றிக்கனியைவிட

இனிமையானது அது

புகழிலும் புணர்ச்சியிலும்

கனிந்து நிற்கும்



உண்மையும் பொய்யாகும்.

பொய்யும் உண்மையாகும்

கலைந்த கனவுகளுக்கு

காலூன்ற கற்றுக்கொடுத்த

கைகளும் கடந்தேறும்

முயற்சிகளின் முட்டுக்கட்டாய்

விளைந்த முற்களும்

காணாமல் போகும்

வாழ்க்கை பயணங்களில்

Monday, March 29, 2010

ஐடியாஸ் & கேள்விஸ்

வீட்டுக்கு கொசு வராம இருக்கனும்னா இரண்டு வழிகள்
  1. கொசுவுக்கு உங்களோட வீட்டு அட்ரஸை தப்பா கொடுக்கனும்
  2. கொசுவரும் போது வீட்ல லைட் ஆஃப் பண்ணிடனும் அப்போ தான் கொசு வீட்ல யாரும் இல்லைன்னு நினைச்சுட்டு போய்டும்.

எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு
  1. தண்ணி பாம்புக்கு ஜல்பு புடிக்குமா?
  2. கருப்பா இருக்கர எருமை மாடு எப்படி வெள்ளை கலர்ல பால் கொடுக்குது?
  3. சரக்கு ரெயில் தள்ளாடுமா?
  4. பிராந்திய ஹாட் ட்ரிங்க்ஸ்னு சொல்றாங்களே அதை அப்படியே குடிக்கலாமா இல்லை ஆத்தி குடிக்கனுமா?
  5. குண்டூசி ஒல்லியா தானே இருக்கு அப்ரம் ஏன் அதை குண்டூசின்னு சொல்றோம்?
இதுக்கெல்லாம் பதில் சொல்லமுடியுமா?
இப்படிக்கு தீவிரமா யோசிச்சு சயிண்ட்டிஸ்ட் ஆக துடிக்கும் இளைஞர் சங்கம்

கடி - 3

நேசித்து பார் கவிதை வரும்
பிரிந்து பார் சோகம் வரும்
நினைத்து பார் அழுகை வரும்
என்னை மறந்து பார் அடிக்கிர
அடியில ஆம்புல்ன்ஸ் வரும்.

முடி வளர்ந்தா வெட்டிக்கலாம்
நகம் வளர்ந்தா வெட்டிக்கலாம்
ஆனா அறிவு வளர்ந்தா........
கவலைபடாதீங்க உங்க நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் நடக்காது

நடிப்புக்கு சிவாஜி
சண்டைக்கு ஜாக்கிஜான்
கிரிக்கெட்டுக்கு சச்சின்
செஸ்சுக்கு விஸ்வநாதன்
அழகுக்கு ஐஸ்வர்யாராய்
டீக்கு பன்னு
டிவிக்கு சன்
வெயிலுக்கு மோரு
நைட்டுக்கு பீரு
இசைக்கு ஏ. ஆர். ரகுமான்
குழந்தைக்கு விளையாட்டு
பாய்ஸ்சுக்கு கேர்ள்ஸ்
பாசத்துக்கு நீ
எஸ்.எம்.எஸுக்கு நான்
ஆனா ஃப்ரண்ட்ஷிப்புக்கு
வேற யாரு நாம தான்!!

காலேஜ் கடிஸ்

ஒரு ஃபிகரை கரக்ட் பண்ண 3 வழிகள்
  1. அழிப்பான்(Eraser)
  2. ink remover
  3. whitner
என்ன முழிக்கிர ஃபிகர்னு சொன்னது டயகிராம் நீங்க இன்னும் திருந்தவே இல்லையா!!



என்னோட வலதுகைல பென், இடது கைல செல்போன்
ஒரு காதுல வாத்தியார் படம் நடத்துரத கவனிக்கனும் மறுகாதுல ஃப்ரண்ட்ஸ் பேசரத கேக்கனும்
ஒரு கண் போர்டுல பார்த்து கணக்கு எழுதும், இன்னொரு கண் தூங்கிட்டு இருக்கும்
எவண்டா சொன்னது காலேஜ் லைஃப் ஈஸின்னு

கல்லூரி வாழ்க்கையின் மிகப்பெரிய காமெடிகள்
  1. தயவு செய்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க நான் படிக்கனும்
  2. க்ளாஸ் இல்லைன்னா வாங்க லைப்ரரிக்கு போலாம்
  3. சார் எனக்கொரு சந்தேகம்


ஒரு A4 பேப்பரை தயாரிக்க பத்து லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதானால் இனிமேல் அசைன்மெண்ட் எழுதுவதை தவிர்த்து தண்ணீரை பாதுகாப்போம் பொதுநலன் கருதி வெளியிடுவோர் கல்லூரி மாணவர்கள்.

தைரியம் என்றால் என்ன?
ஃப்ரண்ட்ஸோட ஊரைச்சுத்திட்டு நடுராத்திரியில ஃப்ரண்டோட பைக்ல வீட்டுக்கு வரும்போது, அம்மா வாசல்ல நம்மை அடிக்க துடைப்பத்தை வச்சிக்கிட்டு காத்திருக்கும்போது “ என்னம்மா இன்னுமா பெருக்கிட்டு இருக்கே”ன்னு கேப்போமே அதான் தைரியம்.

பேசுவதற்கு வார்த்தைகள் அதிகமாக இருந்தாலும் பேச முடியாமல் தவிக்கும் ஒரே இன்பமான துன்பம் தான் “ NO BALANCE”.

ஒரு பொண்ணு தலைகுனிஞ்சு நடக்க பெற்றோர்கள் என்ன செய்யனும்?
பொண்ணு கைல ஒரு செல்போனும் அதுல மெசேஜ் கார்டும் போட்டு கொடுக்கனும்.

பொதுவா பாய்ஸ் வாட்சை இடது கைல கட்டுராங்க, ஆனா பொண்ணுங்க வலது கைல கட்டுராங்க ஏன் தெரியுமா?
டைம் பாக்கத்தான்

கடி - 2

சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?
சிவகாசியில காசை கரியாக்குவாங்க நெய்வேலியில கரியை காசாக்குவாங்க இப்படிக்கு,
யோசனை பண்ணியே வீணாபோன சங்கத்தில் ஒரு சிங்கம்


இன்னைக்கு எங்க சங்கத்துக்கு விடுமுறை, அதானால எஸ்.எம்.எஸ் வரும் ஆனா மேட்டர் வராது
இப்படிக்கு, வேலைக்கு போகாம அடிக்கடி லீவ் எடுப்போர் சங்கம்

உனக்காக இருப்பேன் என்பது குடும்பம், உனக்காக மட்டும் இருப்பேன் என்பது காதல், நமக்காக நாம் இருப்போம் என்பது நட்பு, யாருக்காகவும் நான் இல்லை என்பது கொழுப்பு.

செடி வாடினால் தண்ணீர் விடுவேன், நான் வாடினால் கண்ணீர் விடுவேன், நீ வாடினால் என் உயிரை விடுவேன், நீ சந்தோசமா இருக்க அடிக்கடி இப்படி ரீல் விடுவேன்

விட்டுக்கொடுப்பது மட்டும் நட்பல்ல
எக்ஸாம்க்கு பிட்டு கொடுப்பதும் நட்பு தான்

செங்கல்லால் பட்ட அடி உள்ளாரும் ஆறாதே சீக்ரெட்
கேமராவால் பட்ட அடி
இப்படிக்கு நித்தி ஆனந்தா

நான் பெண்களை  நெருப்பாக நினைப்பவன்!! அதானால் தான் ஓடிப்போய் அவர்களை அணைத்துகொள்ள துடிக்கிறேன். எல்லாம் சமூக சேவை தான் இப்படிக்கு, நித்தி ஆனந்தா சுவாமிகள்

சின்ன ஏமாற்றம் நம்மை கலங்க வைக்கும்
சின்ன பிரிவு நம்மை அழவைக்கும்
சின்ன வீடு நம்மை குஜால் படுத்தும்
இப்படிக்கு நித்தி

கவிதை துளிகள்

நான் வாங்கிய முதல் ஆட்டோகிராப்
உதடுகளால் என் கன்னத்தில் கையெழுத்து போட்ட என் அம்மாவின் அன்பு முத்தம்...

வேண்டும் வரங்கள்:
நினைத்த உடன் மழை, இரவு நேர மெல்லிசை, கள்ளமில்லா சிரிப்பு, பொய்யில்லா நட்பு, மீண்டும் ஒரு பள்ளிப்பருவம், தோள் சாய தோழி, உயிர்கொடுக்கும் தோழன், தாய்மடி தூக்கம், தூக்கத்தில் மரணம், மரணம் வரை உன் நட்பு......

கல்லில் செதுக்கிய
சிலையை விட கருவறையில்
சுமந்த தாயே
தெய்வம்

உன்னை காயப்படுத்த வேண்டும் என்று எனக்கு விருப்பமில்லை ஆனால் உன்னை நான் காயப்படுத்தாவிட்டால் எனக்கு வேறு அடைக்கலம் இல்லை
-மரக்கொத்தி

காதலென்னும்
காற்றில் மட்டும்
மான்கள் வலைவிரிக்க
வேடர்கள்
அகப்பட்டுக்கொள்கிறார்கள்

காதலிகள்
எல்லாம் கண்ணகிகள்
அல்ல சிலைகள்
கட்டுவதற்கு

மலரத்துடிக்கும்
மொட்டுக்கு தெரியாது
மலர்ந்தால்
மரணமென்று...

நட்புக்கவிதை:
வான் கொண்ட நிலவுக்கு மூன்றாம் பிறை அழகு
நான் கொண்ட நட்புக்கு நீ மட்டுமில்லை
உன் நிழல் கூட அழகு தான்

காற்றும் இசையாகும் வாசித்தால்
வார்த்தைகளும் கவிதையாகும் யோசித்தால்
இந்த உலகமே நட்பாகும் நேசித்தால்


அவள் அனைத்தையும்
அழகென்று ரசித்து கொண்டிருந்தாள்
அவள் அழகை
நான் மட்டும்
ரசித்து கொண்டிருந்தென்
அவளுக்கு தெரியாமல்..................


அவள் மட்டுமல்ல
அவள் பேச்சும் தேன் என்று
நான் உணரவில்லை
அவள் பேசும் வரை.....................