Monday, April 19, 2010

ஜோக்ஸ் - 1

பையன்: அப்பா 1+1 எவ்ளோ’பா?


அப்பா: அட மாங்கா மடையா, தடி மாடு, தண்ட சோறு, மரமண்டை, எருமாடு மாதிரி வளர்ந்திருக்கியே இதுகூடவா தெரியலை உனக்கு, அந்த கால்குலேட்டரை எடுத்து வா



ஹோட்டல்காரர்: தினமும் பார்சல் வாங்கறீங்க அதுக்கு இங்கேயே சாப்பிடவேண்டியது தானே

சிவா: மன்னிக்கனும் சார் டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார்



குரங்கு1: எக்ஸ்க்யூஸ்மீ நான் இந்த மரத்துக்கு புதுசா வந்திருக்கேன் நான் உங்க பாஸ்கிட்ட பேசலாமா?

குரங்கு2: ஷ்ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதே எங்க பாஸ் சீரியஸா இந்த ஜோக்கை படிச்சுட்டு இருக்காரு



டீச்சர்: சூரியன் மேற்கே மறையும்’ இது இறந்த காலமா நிகழ்காலமா எதிர்காலமா?

மாணவன்: டீச்சர் அது சாயங்காலம் டீச்சர்



அப்பா: ஏண்டா நேத்து குடிச்சிட்டு விழுந்து கிடந்தே?

பையன்: எல்லாம் கெட்ட சகவாசம் தான்பா, 6பீர் 6 பேரு, அதுல 5 பேரும் குடிக்கலை. இந்த மாதிரி ஃப்ரண்ட்ஸ் இருந்தா இப்படி தான்.



பையன்: ‘காதல் வந்தால் சொல்லியனுப்பு’

பொண்ணு: போடா லூசு கல்யாணமே வந்திருச்சு.. இந்தா பத்திரிகை ‘உயிரோடிருந்தால் மொய் அனுப்பு”

4 comments:

  1. ஹோட்டல்காரர்: தினமும் பார்சல் வாங்கறீங்க அதுக்கு இங்கேயே சாப்பிடவேண்டியது தானே

    சிவா: மன்னிக்கனும் சார் டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார்

    ayyoooooooo arivu kozhunthu hhaahhaha

    ReplyDelete
  2. குரங்கு1: எக்ஸ்க்யூஸ்மீ நான் இந்த மரத்துக்கு புதுசா வந்திருக்கேன் நான் உங்க பாஸ்கிட்ட பேசலாமா?

    குரங்கு2: ஷ்ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதே எங்க பாஸ் சீரியஸா இந்த ஜோக்கை படிச்சுட்டு இருக்காரு

    boss naanthaan krangu one yaarunnu theriyum athuyaaru kurangu 2?

    ReplyDelete