Tuesday, June 15, 2010

வெண்பா ஓரு குறும்பயணம்

வெண்பா அமைத்தலில் முதன்மையாக நாம் அறிவது

1. எழுத்து

2. அசை

3. சீர்

4. தளை

5. அடி

எழுத்து என்பது உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் மற்றும் இவையிரண்டு சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் ஆகும்.

எழுத்தாலானது அசை.எழுத்துக்களை கூறும்போது ஏற்படும் ஒலிகளை வைத்து பிரிப்பது ஆகும். இதில் குறில் நெடில் என இருவகையாக பிரிக்கலாம்.

அசை என்பது நேரசை நிரையசை என இருவகைப்படும் நேரசை என்பது ஒற்றெழுத்தை நீக்கி ஓரெழுத்தும் நிரையசை என்பது ஒற்றெழுத்தை நீக்கி இரண்டு எழுத்துக்களும் பெரும்.

நேரசை:

நேரசை என்பது குறில் தனியாகவும், குறில் ஒற்றெடுத்தும், நெடில் தனியாகவும், நெடில் ஒற்றெடுத்தும் வருவது நேரசையாகும்.

      எ.கா: வாழ்/க - நெடில் ஒற்று / குறில் தனித்து வந்த நேரசை

நிரையசை:
குறில் இணை தனியாகவும் குறில் இணை ஒற்றெடுத்தும் குறில்நெடில் தனியாகவும் குறில்நெடில் ஒற்றெடுத்தும் வருவது நிரையசை ஆகும்.

          எ.கா: வளர்/க - குறில் இணை ஒற்றெடுத்து வந்த நிரையசை

சீர்:

சீர் என்பது ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நான்கசைச்சீர் என நான்கு வகைப்படும்

ஓரசைச்சீர் என்பது ஈற்றடிச்சீராக மட்டுமே வரும்

நேர் – நாள்

நிரை – மலர்

    எ.கா: பால் – நேர்

               தவில் - நிரை

ஈரசைச்சீர் என்பது

நேர் நேர் – தேமா - இயற்சீர்

நிரை நேர் – புளிமா மாச்சீர்

நிரை நிரை – கருவிளம்

நேர் நிரை – கூவிளம் விளச்சீர்

                எ.கா: சீ/ மா நேர் நேர்

                          சினி/மா நிரை நேர்

                         கரி/நாய் நிரை நிரை

                          சீ/மான் நேர் நிரை

மூவசைச்சீர் என்பது

நேர் நேர் நேர் – தேமாங்காய்

நிரை நேர் நேர் – புளிமாங்காய் - காய்ச்சீர்

நிரை நிரை நேர் – கருவிளங்காய் - வெண்சீர்

நேர் நிரை நேர் - கூவிளங்காய் வெண்பாவுரிச்சீர்

                   எ.கா: பா/கற்/ காய் – நேர் நேர் நேர்

                              கனல்/கண்/ணன் – நிரை நேர் நேர்

                               சிவந்/தகன்/னம் நிரை நிரை நேர்

                                கண்/ணடித்/ தல் நேர் நிரை நேர்

நேர் நேர் நிரை – தேமாங்கனி

நிரை நேர் நிரை – புளிமாங்கனி

நிரை நிரை நிரை – கருவிளங்கனி

நேர் நிரை நிரை – கூவிளங்கனி

                  எ.கா: கண்/ணின்/மணி நேர் நேர் நிரை

                             திரு/மா/லினை நிரை நேர் நிரை

                             திரு/முறை/களை நிரை நிரை நிரை

                             சல்/லடை/யெடு நேர் நிரை நிரை

தளை:

வெண்பாவிற்கு தேவையான தளைகளை மட்டும் பார்ப்போம்

மா முன் நிரை

விள முன் நேர் - இயற்சீர் வெண்டளை

காய் முன் நேர் - வெண்சீர் வெண்டளை

          எ.கா: மாய / வனைக்கண்டால் - மா முன் நிரை -இயற்சீர் வெண்டளை

                     மலர்களை/ போல் - விள முன் நேர் - இயற்சீர் வெண்டளை

            கண்ணிரண்டில் / மையிட்ட – காய் முன் நேர் – வெண்சீர் வெண்டளை

அடி:

இருசீரடி – குறளடி

                எ.கா: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

                            இறைவன் அடிசேரா தார்

முச்சீரடி – சிந்தடி

                          எ.கா: நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப்

                                      பிறநாட்டுப் பெண்டிட் முடிநாறும் பாரி

                                      அறநாட்டுப் பெண்டி ரடி.

நாற்சீரடி – அளவடி, நேரடி

              எ.கா: கொடுக்கின்றி வந்த விஷமதை வைக்க

                          நடுத்தொண்டை கண்டான் நயந்து -நடுவில்நான்

                          உள்ளதைக் கேட்டால் உவப்பின்றி சொல்லிடும்

                          சொள்ளையான காரணம் ஏன்

வெண்பா என்பது

வெண்பா என்பது ஈற்றடி சிந்தடியாகவும் மற்றைய அடிகள் அளவடிகளாகவும் வரும். இயற்சீர் வெண் சீரும் மட்டுமே வரும் மற்ற சீர்கள் எதுவும் வருவதில்லை.

இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை தளைகளாக வரும். முடிவாக கடைசி அடியின் ஈற்றுச்சீர் நாள் மலர் காசு பிறப்பு என்று முடியும்.

வெண்பாவில் ஆறுவ்கையான வெண்பாக்கள் உள்ளன. (குறள் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை சிந்தியல் வெண்பா ,நேரிசை சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா)

மேற்கண்ட இலக்கணத்தை முறையான பயிற்சியோடு பழகினால் வெண்பா எழுதுவது எளிதாகும்.

Tuesday, June 8, 2010

ஊக்கமது கைவிடேல்

இதுவரைக்கும் உருப்படியான பதிவுன்னு ஒன்னையும் போட்டதில்லை. ஆதவன் சார்பா பரீட்சைன்னு ஒரு உருப்படியான பதிவு போடலாம்னா அதுவும் லேட் L. மன்னிக்கவும் நண்பர்களே! அருமை நண்பர் ஆதவன் ஐயா எக்ஸாம் பதிவை போட்ட நேரம் எனக்கு எக்ஸாம் இருந்த்தால் பதிவு எழுத நேரமில்லை.

இந்த வாரம் தான் எல்லா (ரெகுலர் எக்ஸாம் + அரியர்ஸ்) எக்ஸாமையும் முடிச்சிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனேன். எக்ஸாம் எழுதின கையோட இந்த எக்ஸாம் பதிவையும்ம் கொஞ்சம் முடிச்சிடலாம்னு இந்த பதிவு.

எக்ஸாம் பத்தி எழுதனும்னா நிறைய எழுதிக்கிட்டே போகலாம் ஆனாலும் நான் மொக்கை போட விரும்பலை. கொஞ்சமா எழுதிட்டு போய்டுரேன்.

காலாண்டு ஒரு பெருங்குற்றம்
அரையாண்டு ஒரு பாவச்செயல்
முழுஆண்டு ஒரு மனித தன்மையற்ற செயல்

இப்படியெல்லாம் பரீட்சைய குறை சொல்லிக்கிட்டு படிக்காம அரட்டை அடிச்சுட்டு வெட்டியா இருந்தாலும் சுமாரா பாஸ் பண்ணி எந்த வகுப்புலையும் கோட்டடிக்காம எல்லா க்ளாஸையும் தாண்டி வந்தாச்சு! ஆனா பாருங்க பள்ளிக்கூடத்துல அரியர்ஸ் வைக்காம ஒழுங்கா படிச்சுட்டு வந்த புள்ளை காலேஜ்னு வந்ததும் அரியர்ஸ் வச்சிட்டேன்.

யூ.ஜில படிக்கவே கூடாதுங்கி முடிவோட தான் காலேஜ்ல அடியெடுத்து வச்சேன். (அது ஒரு தனிக்கதை, நினைச்சது கிடைக்கலைன்னு ஒரு வருத்தம்.) எங்க வீட்ல அப்பாவும் அம்மாவும் ”படிக்கலைன்னாலும் பரவால்லம்மா நீ காலேஜ்க்கு போய்த்தான் ஆகனும்”னு துரத்திவிட்டு அப்புறம் எக்ஸாம் வந்த்தும் படி படின்னு ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணி பாஸ் பண்ண வச்சிட்டாங்க. ஆனாலும் விடுவேனா என்னோட ஆசைக்கு ஒரே ஒரு அரியர்ஸ் வச்சிக்கிட்டேன். ஏன்னா அரியர்ஸ் இல்லாத படிப்பு அரைபடிப்பாம் என்னோட சீனியர்ஸ் அட்வைஸ் இது.

வாழ்க்கைல பிறப்பு இறப்பு இளமை முதுமை இது எல்லாமே ஒரே ஒரு முறை தான். ஆனா இந்த எக்ஸாம்ஸ் இருக்கே... ஹப்பா! படுதொல்லை வருசா வருசம் வந்து தொலையும். இந்த எக்ஸாம் எழுத முறையை மட்டும் எவன் தான் கண்டுபிடிச்சானோ, அவன் மட்டும் கிடைச்சா ஒரு வழி பண்ணிடுவேன். கிட்டதட்ட என்னை மாதிரி படிக்காத பசங்க எல்லோரும் இந்த டயலாக்கை அவங்க படிக்கி காலத்துல ஆயிரம் முறை சொல்லி கொட்டாவி விட்டு, கடைசி பென்ச்ல தூங்கியிருப்பாங்க. கண்டுபிடிச்சவன் கிடைச்சுட்டாலும் படிக்காத சில பேரால அந்த ஒருத்தனை என்ன தான் செய்ய முடியும். :-( 

போன வாரம் நடந்த எக்ஸாம் உண்மையிலே ரொம்ப வித்தியாசமா இருந்து. எப்படின்னா, இதுவரைக்கும் எழுதின எக்ஸாம்ஸ்க்கெல்லாம் ஒரளவுக்காவது புக்கை தொட்டிருப்பேன். ஆனா இந்த தடவை, சுத்தம் சோறு போடும்னு எக்ஸாம் எழுத புக்கையே நிறைய தடவை தொலைச்சு எக்ஸாம் அன்னைக்கு கண்டுபிடிச்சு ஜஸ்ட் 4 மணி நேரம் படிச்சு(?!) எழுதினேன். இப்பல்லாம் புக்கை தொட்டாலே நல்லா கொட்டாவியும் அதுக்கு இலவச இணைப்பா தூக்கமும் வந்துடுது. ஒரு புத்தகம் ஆயிரம் தாய்மார்களுக்கு சமமாம் தூங்க வைக்கிறதுல.தூக்கம் வராதவங்களுக்கு என்னோட அட்வைஸ் பாடபுத்தகம் படிங்க நல்லா தூக்கம் வரும்.

இந்த எக்ஸாம் பயமெல்லாம் பள்ளிக்கூடம் வரைக்கும் தான். அரக்கபறக்க ஒரு எழுத்துவிடாம படிச்சு, எக்ஸாம்ல என்ன கேள்வி கேப்பாங்களோன்னு பயத்தோட போய் அதில வர கேள்விகளுக்கு அரைகுறையா சந்தேகத்தோட பதிலை எழுதி, நேரம் பத்தாம கடைசியில அந்த கேள்வி தப்புன்னதும் தலையணை பாதி நனைய அழுது தீர்த்து அப்ப்ப்பா...... எத்தனை பயம் ஸ்கூல்ல படிக்கும் போது மட்டும்.

ஆனா இப்பல்லாம் அந்த பயமே இல்லை ஏன்னா நாம தான் படிக்கதே இல்லையே! டிகிரி வாங்கனும்னு எதாவது ஒரு கோர்சுக்கு அப்ளிகேசனை போட வேண்டியது. புக்கை வாங்கி மேல் பரண்ல போட்டு வச்சிட வேண்டியது. பிசிபி க்ளாசை பாதி நாள் அட்டெண்ட் பண்ணி அதுலயும் தூங்கி வழிஞ்சு ஆபிஸ்ல இருக்க ஆணியை புடுங்கவே நேரம் சரியா இருக்கும். அப்புறம் ஒரு நாளோ, இல்லை ஒரு மணி நேரமோ படிச்சு மூணு மணி நேர எக்ஸாமை எழுதிட்டு வந்து அரியர்ஸ் வைக்க வேண்டியது. இதுவே வேலையாப்போச்சு!

ம்ஹ்ம்ம்ம்ம்... நாங்களும் எக்ஸாமுக்குப் படிக்கிறோம். அதனால நானும் படிப்ஸ், நானும் படிப்ஸ், நானும் படிப்ஸ்.....