Monday, April 19, 2010

ஜோக்ஸ் - 1

பையன்: அப்பா 1+1 எவ்ளோ’பா?


அப்பா: அட மாங்கா மடையா, தடி மாடு, தண்ட சோறு, மரமண்டை, எருமாடு மாதிரி வளர்ந்திருக்கியே இதுகூடவா தெரியலை உனக்கு, அந்த கால்குலேட்டரை எடுத்து வா



ஹோட்டல்காரர்: தினமும் பார்சல் வாங்கறீங்க அதுக்கு இங்கேயே சாப்பிடவேண்டியது தானே

சிவா: மன்னிக்கனும் சார் டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார்



குரங்கு1: எக்ஸ்க்யூஸ்மீ நான் இந்த மரத்துக்கு புதுசா வந்திருக்கேன் நான் உங்க பாஸ்கிட்ட பேசலாமா?

குரங்கு2: ஷ்ஷ்ஷ்ஷ் சத்தம் போடாதே எங்க பாஸ் சீரியஸா இந்த ஜோக்கை படிச்சுட்டு இருக்காரு



டீச்சர்: சூரியன் மேற்கே மறையும்’ இது இறந்த காலமா நிகழ்காலமா எதிர்காலமா?

மாணவன்: டீச்சர் அது சாயங்காலம் டீச்சர்



அப்பா: ஏண்டா நேத்து குடிச்சிட்டு விழுந்து கிடந்தே?

பையன்: எல்லாம் கெட்ட சகவாசம் தான்பா, 6பீர் 6 பேரு, அதுல 5 பேரும் குடிக்கலை. இந்த மாதிரி ஃப்ரண்ட்ஸ் இருந்தா இப்படி தான்.



பையன்: ‘காதல் வந்தால் சொல்லியனுப்பு’

பொண்ணு: போடா லூசு கல்யாணமே வந்திருச்சு.. இந்தா பத்திரிகை ‘உயிரோடிருந்தால் மொய் அனுப்பு”

கடி - 4

அவள் என்னைப்பிரிந்தால்

மது குடிக்க மாட்டேன்

தாடி வளர்க்க மாட்டேன்

அழுது புலம்ப மாட்டேன்

அமைதியாக தூங்கிக்கொண்டிருப்பேன்

அவள் தங்கையின் மடியில்!



இன்றைய தத்துவம்:

உங்களை யாராவது கல்லால் அடித்தால், நீங்க அவர்களை பூக்களால் அடியுங்கள், ஆனால் பூத்தொட்டியுடன் அடிக்க மறக்காதீர்கள்



என்னதான் பூமி சூரியனை சுத்தி சுத்திவந்தாலும் சூரியன் பூமிக்கு பிக் அப் ஆகாது



என்ன தான் செண்டிமெண்ட் பாத்தாலும் கப்பல் கிளம்பும்போது எலுமிச்சைபழம் வைக்கமுடியாது, சங்கு ஊதினாத்தான் கிளம்பும். இப்படிக்கு கப்பலில் மல்லாக்க படுத்துக்கொண்டு யோசிப்போர் சங்கம்


யானை எறும்பு ரெண்டு பேரும் ஒரே வகுப்புல படிக்கிறாங்க, யானை எப்பவு சரியான நேரத்துக்கு வந்துடும் ஆனா எறும்பு தினமும் க்ளாஸ்க்கு லீவ் போட்டுடும் ஏன் தெரியுமா??????????? ஏன்னா அது ‘கட்’ டெறும்பு.




நீங்க எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கனும் அதை நான் பாத்து ரசிக்கனும். இதெல்லாம் நடக்க நீங்க மெண்டலா இருக்கனும் நான் டாக்டரா இருக்கனும்.



கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்துல கைவக்கக்கூடாது

ஏன் தெரியுமா?

கன்னத்துல கைவச்சிருந்தா எப்படி நீச்சல் அடிக்கமுடியும்.



ட்ரெயின் வரும்போது ட்ராக்ல நின்னவனும், கோபம் வரும்போது “வாணி” முன்னாடி நின்னவனும் பொழச்சதா சரித்திரமே இல்லை!



அரிசி புட்டு குழாபுட்டு, இதைஎல்லாம் சாப்பிடலாம் ஆனா இன்புட் அவுட்புட்’டை சாப்பிடமுடியுமா! இப்படிக்கு லேப்ல அவுட்புட் வராமல் பசியில் துடிப்போர் சங்கம்



டெரரர் மொக்கை: மூணு கரப்பான் பூச்சி ரோட்ல நடந்துபோனதாம். திடீர்ன்னு “விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்” பாட்டு பாடினாங்களாம்,

அப்பறம் அந்த மூணு கரப்பான் பூச்சியும் செத்துப்போச்சாம்

ஏன் தெரியுமா?

ஏன்னா அது ஒரு ‘ஹிட்’ சாங்.

ஜோக்ஸ்

ஆசிரியர்: ஏன் ரொம்ப டென்ஷனா இருக்கீங்க தம்பி. கால்குலேட்டர் ஹால்டிக்கெட் கொண்டுவர மறந்துட்டீங்களா?


மாணவன்: இல்ல சார் தெரியாம நாளைக்கு பரீட்சையோட பிட்டை இன்னைக்கு எடுத்துவந்துட்டேன் சார்.



ராமு: என் மனைவி ரொம்ப அப்பாவி

சோமு: எப்படி சொல்றீங்க?

ராமு: அடிச்சா அழனும்னு கூட தெரியலை அவளுக்கு, என்னையே திருப்பி அடிக்கிறா!



மீனா: எஃப். எம்.ல வேலைக்கு போனது தப்பா போச்சு

கீதா: ஏன் என்னாச்சு?

மீனா: கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க’ன்னு சொல்றாங்க!



சிவா: அந்த பொண்ணு ரொம்ப ஒழுக்கமான பொண்ணு

பாலா: எப்படி சொல்றே

சிவா: நேத்து அவ வீட்டு குக்கர் விசில் அடிச்சதும் குக்கரை செருப்பால அடிச்சிட்டா!



டாக்டர்: நீங்க என்ன சோப் பயன்படுத்தறீங்க?

நோயாளி: கோபால் சோப், கோபால் பேஸ்ட், கோபால் ப்ரஷ்

டாக்டர்: கோபால் கம்பெனி ஒரு இண்டர்நேஷனல் கம்பெனியா?

நோயாளி: இல்ல டாக்டர் கோபால் என்னோட ரூம்மேட்



மனைவி: என்னங்க நம்ம மகன் பக்கத்து வீட்டு பொண்ணுகிட்ட லவ் லெட்டர் கொடுத்தனாம்

கணவர்: இல்லையே நான் அவளோட அம்மாகிட்ட தானே கொடுக்க சொன்னேன்



ஆசிரியர்: மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

மாணவன்: மணலுக்கு சொறிஞ்சு விட்டு நைசில் பவுடர் போட்டு விடனும் சார்



நடத்துனர்: டிக்கட் எடு

சிவா: முன்னாடி எடுப்பாங்க

நடத்துனர்: யாரும் எடுக்கலை

சிவா: அப்போ பின்னாடி எடுப்பாங்க

நடத்துனர்: பின்னாடியும் யாரும் எடுக்கலை

சிவா: அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா?



அமெரிக்கன்: எங்க ஊர்ல டால்பின்ஸ் பேசும்

ஜப்பான்காரன்: எங்க ஊர்ல ரோபோட்ஸ் எல்லாம் பாடும்

இந்தியன்: எங்க ஊர்ல குரங்கு படிக்கும் பாருங்க சிரிக்குது



போலிஸ்: உனக்கு நாளைக்கு காலைல 5 மணிக்கு தூக்கு தண்டனை

கைதி: ஹா ஹா ஹா

போலிஸ்: ஏண்டா சிரிக்கிற

கைதி: ஹையோ ஹையோ... நான் எந்திரிக்கிரதே 8 மணிக்கு தான்



அஜய்: என்னோட டான்ஸ் ஆட வரியா

ஸ்டார்: நான் சுவாமிஜியோட மட்டும் தான் ஆடுவேன் சாக்கடையோட இல்லை



அம்மா: ஏண்டா முடி வெட்டலை

பையன்: இது அந்நியன் ஸ்டைல்

அம்மா: ஏண்டா மீசை எடுத்துட்டே

பையன்: இது கஜினி சூர்யா ஸ்டைல்

அம்மா: ஏண்டா ஏழு நாளா குளிக்கலை

பையன்: இது வேட்டைக்காரன் ஸ்டைல்

Thursday, April 15, 2010

சுட்டது

என் பாதையில்

கடந்து வந்த முற்செடிகள்

காணாமல் போயின

அவளின் ஒரு நொடி

பார்வையில்...



நான்கு திங்களின்

நாலாயிரம்

பேர்களின் கனவுகள்

சிறு பொறியில் கலைக்கப்பட்டது

தேன்கூடு...



தமிழை வளர்க்க

தண்ணீர் ஊற்றிய

தமிழனே இன்று தடைக்கல்லாய்

தங்கிலிஷ்ல்.....



கிறுக்கிக்கொண்டிருக்கும்

கிறுக்கல்களின் நாயகனே

குழந்தை...



தனிமையில் சிந்திக்கும்

தலைகள் சில

தலைவர்கள் சில

தறுதலைகள்



கொடுமையிலும் கொடுமை

தேர்வில் தனிமை



வாழ்க்கை பயணத்தில்

நேர ஓட்டத்தை

கிழித்துச்செல்ல

முற்படுபவனுக்கு மிஞ்சுவது

ஏமாற்றமே....



வினாக்களுக்கு விடைதெரியாமல்

விலக்கு அளிக்கிறேன்

விடைகளுக்கு மட்டும்

கண்டுபிடித்துவிட்டேன்

தவறான விடைகளை....

விடைகளிருந்தும் தெரிந்தே தவறுவது

தவறா தப்பா

விடைகளிருந்தும்

விடை தெரியாமல்....



வினாக்கள் விடைகளோடு

தான் பிறக்கின்றன

விடைகளை தொலைத்துவிட்டு

தேடும் மானிட தேடல்கள்

வினாக்களும் விடைகளும்

அறிந்தவன்

அகில ஆசிரியனே.....



கவிதைதேடும்

கவிஞனில் கண்ணில் பட்டது

கவிதையல்ல

காவியம்



முயற்சியின் பயன்

வெற்றிக்கனியைவிட

இனிமையானது அது

புகழிலும் புணர்ச்சியிலும்

கனிந்து நிற்கும்



உண்மையும் பொய்யாகும்.

பொய்யும் உண்மையாகும்

கலைந்த கனவுகளுக்கு

காலூன்ற கற்றுக்கொடுத்த

கைகளும் கடந்தேறும்

முயற்சிகளின் முட்டுக்கட்டாய்

விளைந்த முற்களும்

காணாமல் போகும்

வாழ்க்கை பயணங்களில்